Don't Miss!
- News "வருத்தப்படுவீங்க.." தேர்தல் பத்திரங்கள் ரத்து.. வந்து விழுந்த கேள்வி.. பிரதமர் சொன்ன பதில் இதுதான்
- Technology செதுக்கி வச்சிருக்கான் சீனாக்காரன்.. 64ஜிபி ஸ்டோரேஜ்.. டால்பி அட்மாஸ்.. 4கே ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?
- Lifestyle 100 ஆண்டுகள் கழித்து மீனத்தில் உருவாகும் சதுர்கிரக யோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
- Sports RCB vs SRH : எல்லை மீறிப் போன ஆர்சிபி வீரர்கள்.. "நல்ல வார்த்தையில்" திட்டிய விராட் கோலி.. கதறிய ரசிகர்கள்
- Automobiles டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!! விற்பனையில் நம்பர் 1, 2 இடங்களில் டாடா தான்!
- Finance சிங்கம் களமிறங்கிடுச்சு.. அலாவுதீன் அற்புத விளக்கை கொண்டு வரும் முகேஷ் அம்பானி..!!
- Education 25 சதவீத இடஒதுக்கீட்டில் இலவச சேர்க்கை தனியார் பள்ளிகளுக்கு புதிய அறிவுறுத்தல்...!!
- Travel தமிழக அரசு சார்பில் சென்னையில் கோடை நீச்சல் முகாம்கள் – உங்கள் வீட்டு குட்டீஸ்களை சேர்க்க மறக்காதீர்கள்!
ஏ.ஆர். ரஹ்மானின் இசை ஒரே இரைச்சல்: கிரிஷ் கர்னாட்
டிரினிடாடைச் சேர்ந்த இந்திய வம்சாவழி எழுத்தாளரான வி.எலஸ்.நைபாலுக்கு நோபல் பரிசு கொடுத்திருக்கக் கூடாது என்று அண்மையில் நடந்த இலக்கிய விழா ஒன்றில் எழுத்தாளரும், நடிகருமான கிரிஷ் கர்னாட் தெரிவித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவீந்திரநாத் தாகூர் ஒரு இரண்டாம் தர நாடக ஆசிரியர் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசையை குறை கூறியுள்ளார். பெங்களூரில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நம் நாட்டு உருது கவிஞர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய கர்னாட் ரஹ்மானின் இசையை சாடியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளர். ஆனால் அவரது இசையில் வாத்தியங்களுக்கே தவிர வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அதனால் அவரது இசையில் பாடல் வரிகள் கேட்பதில்லை. பாலிவுட்டில் உருது கவிதைகளுக்கு முக்கியத்துவம் இருந்தது. ஆனால் தற்போது இந்தி படங்களில் உருது கவிதைகள் இறந்துவிட்டன. அதற்கு ரஹ்மானைத் தான் குறை கூற வேண்டும் என்றார்.