Don't Miss!
- News எடப்பாடி பேசுவதை விடுங்க!ரிசல்ட்டுக்கு முன்பே அதிமுக பெரிய தலை போட்டுடைத்த மேட்டர்!இரட்டை இலை பதறுதே
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கிரிஷ் கர்னாடின் கடைசி ஆசையை நிறைவேற்றி வைத்த குடும்பத்தார்
Recommended Video
பெங்களூர்: மறைந்த நடிகர் கிரிஷ் கர்னாடின் கடைசி ஆசையை அவரின் குடும்பத்தார் நிறைவேற்றி வைத்துள்ளனர்.
நேற்றைய தினம் சினிமா மற்றும் நாடக உலகிற்கு கருப்பு தினம் என்றே கூற வேண்டும். நேற்று காலை பிரபல நடிகரும், இயக்குநரும், நாடக எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட் பெங்களூரில் காலமானார். மதியம் 2 மணிக்கு பிரபல நடிகரும், கதை-வசனகர்த்தாவும், நாடக எழுத்தாளருமான கிரேஸி மோகன் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
சில காலமாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த கிரிஷ் கர்னாட் தான் உயிரிழக்கும் முன்பு தனது கடைசி ஆசையை தெரிவித்துள்ளார்.
கிரிஷ் கர்னாட்
நான் இறந்த பிறகு என் உடல் மீது ஏகப்பட்ட மாலைகள், மலர் வளையம் வைக்கக் கூடாது. சாலை நெடுகிலும் மலர் தூவி என் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்லக் கூடாது. மேலும் என் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வி.ஐ.பி.க்கள் யாரும் என் வீட்டிற்கு வரக் கூடாது. என் இறுதிச் சடங்கு மிகவும் எளிமையான முறையில் நடைபெற வேண்டும் என்று கிரிஷ் கர்னாட் தனது கடைசி ஆசையை குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.
கோரிக்கை
கர்னாட் பேச்சிற்கு மறுப்பேது. அவர் தெரிவித்ததுபடி அவரின் குடும்பத்தார் நடந்து கொண்டனர். கிரிஷ் கர்னாட் காலமாகிவிட்டார், தயவு செய்து யாரும் அஞ்சலி செலுத்த வீட்டிற்கு வர வேண்டாம். அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த விரும்புபவர்கள் இறுதிச் சடங்கு நடக்கும் இடத்திற்கு நேராக வருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கர்னாட் குடும்பத்தார் கோரிக்கை விடுத்தனர்.
இறுதிச் சடங்கு
கர்னாட் குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்று வி.ஐ.பி.க்கள் யாரும் அவரின் வீட்டிற்கு செல்லவில்லை. கிரிஷ் கர்னாடின் இறுதிச் சடங்கு நேற்று மதியம் 2 மணிக்கு பிரேசர் டவுனில் நடைபெற்றது. கர்னாடின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுமுறை
கிரிஷ் கர்னாடின் மறைவு செய்தி அறிந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி மாநிலத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் கர்னாடின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடக்கும் என்று தெரிவித்தார். இது தவிர கர்நாடகாவில் நேற்று அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.