Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சல்மானை கல்யாணம் செய்ய வீட்டை விட்டு ஓடி வந்த பெண்
சல்மான் கானை திருமணம் செய்யவேண்டுமென இளம்பெண் ஒருவர் வீட்டை விட்டு ஓடி வந்துள்ளார்
சென்னை: சல்மான் கானை திருமணம் செய்து கொள்வதற்காக ரசிகை ஒருவர் வீட்டை விட்டு ஓடி வந்துள்ளார்.
நடிகர்களை திரையில் பார்த்து ரசிக்கும் ரசிகைகள் ஒரு படி மேலே போய் அவர்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். அஜித், பிரசாந்த் போன்ற நடிகர்களின் அழகை பார்த்து அவர்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ரசிகைகள் வீட்டை விட்டு ஓடி வந்ததாக வரலாறு இருக்கிறது.
அதுபோல் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு நடந்துள்ளது. 52 வயதாகும் சல்மான் கான் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக உள்ளார். வயதானாலும் இவருக்கு அவ்வப்போது ரசிகைகளின் காதல் அம்புகள் எய்தப் பட்டுக்கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில், சமீபத்தில் பந்த்ராவில் உள்ள சல்மான் கானின் வீட்டிற்குள் குசும் என்ற 24 வயது இளம்பெண் நுழைய முயற்சி செய்துள்ளார். காவலாளிகள் அவரிடம் விசாரித்தபோது, தான் சல்மான் கானின் தீவிர ரசிகை என்றும், அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், அதை சல்மானிடம் நேரில் சொல்லவே வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு போலீசார் விசாரித்ததில் அப்பெண் டேராடூனைச் சேர்ந்தவர் என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் தெரிய வந்தது. பிறகு பெற்றோரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.