Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
புதுப்பேட்டை படத்தோட பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவை பாக்க முடியலை... கீதாஞ்சலி செல்வராகவன் வருத்தம்
சென்னை : புதுப்பேட்டை படத்தின் 15வது ஆண்டு கொண்டாட்டத்தை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.
படத்தின் அடுத்த பாகம் குறித்த புதிய அப்டேட்டை நேற்றைய தினம் இயக்குநர் செல்வராகவன் அறிவித்துள்ளார்.
அவருடைய நரையில் என் உதட்டுச்சாயம்.. கணவரின் காதுக்கு மேல் முத்தம் கொடுத்த பிரியங்கா சோப்ரா!
இந்நிலையில் இந்த படத்தின் முதல் காட்சியை தான் தன்னுடைய கல்லூரி நாட்களில் பார்க்க முடியாததற்கான காரணத்தை கீதாஞ்சலி செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.
தனுஷ் -செல்வராகவன்
புதுப்பேட்டை படம் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் சிறப்பாக அமைந்த படம். இதன் 15வது ஆண்டு கொண்டாட்டத்தை அந்த படக்குழுவினர் தற்போது கொண்டாடி வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் படத்திற்கு பாராட்டுக்கனை தெரிவித்துள்ளதுடன் படத்தின் நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
ஹின்ட் கொடுத்த இயக்குநர்
இந்நிலையில் படத்தின் 15வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுக்களை தெரிவித்துள்ள படத்தின் இயக்குநர் செல்வராகவன், கூடிய விரைவில் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான பணிகள் துவங்கவுள்ளதாக ஹின்ட் கொடுத்திருந்தார்.
கீதாஞ்சலி செல்வராகவன் வெளிப்படை
இந்நிலையில் அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இன்றைய தினம் படம் குறித்த தன்னுடைய நினைவலைகளை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். தன்னுடைய கல்லூரி நாட்களில் காலேஜை கட்டடித்துவிட்டு செல்ல முடியாமல் படத்தின் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவை மிஸ் செய்ததாக அவர் கூறியுள்ளார்.
படம் குறித்த ஆய்வறிக்கை
ஆனால் அடுத்த சில நாட்களிலேயே படத்தை தன்னுடைய நண்பர்களுடன் சென்று பார்த்ததாகவும் படத்தை கண்டு தான் மிகவும் வியப்படைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய மாஸ்டர் டிகிரிக்காக இந்த படம் குறித்த ஆய்வறிக்கையை தான் மேற்கொண்டு சமர்ப்பித்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.