Don't Miss!
- News இறங்கிய வேகத்திலேயே ஏறிய சின்ன வெங்காயம்.. கோயம்பேட்டில் இஞ்சி பாருங்க.. சென்னையில் காய்கறிகள் விலை
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
திரைப்படமாகிறது நித்தியானந்தாவின் செக்ஸ் லீலைகள் – ராம் கோபால் வர்மா இயக்குகிறார்
நிஜ சம்பவங்களைப் படமாக்குவதில் கில்லாடி ராம் கோபால் வர்மா. சமீபத்தில் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நித்தியானந்தா சாமியாரின் செக்ஸ் லீலைகளை கையில் எடுத்துள்ளார் வர்மா.
காட் அன்ட் செக்ஸ் என்ற பெயரில் ஒரு படத்தை உருவாக்குகிறார் வர்மா. இது நித்தியானந்தாவின் செக்ஸ் லீலைகளையும் உள்ளடக்கியதாக இருக்குமாம்.
இதுகுறித்து வர்மா கூறுகையில், ஒரு ஆசிரமத்தின் உள்ளே நடக்கும் ரகசியங்கள் குறித்த படம் இது. இது செக்ஸ் லீலைகளாக மட்டுமே இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மாறாக, உள்ளே நடக்கும் கோஷ்டிப் பூசல்களாக இருக்கலாம். அவர்களுக்கு எதிராக நடப்போரின் செயல்களை கூறுவதாகவும் இருக்கலாம்.
நித்தியானந்தா விவகாரத்தின் மூலம் ஒரு விஷயம் தெளிவாகியுள்ளது. அதாவது மனிதனால் கடவுளைக் கூட வெல்ல முடியும், ஆனால் காமத்தை வெல்ல முடியாது என்பதே அது.
நாடு முழுவதும் இதுபோன்ற செக்ஸ் லீலைகளில் சிக்கிய எத்தனையோ சாமியார்களை நாம் பார்த்து வருகிறோம். ஆனாலும் மக்கள் தொடர்ந்து சாமியார்களிடம் சென்று கொண்டுதான் உள்ளனர்.
கடவுள் பேச மாட்டார். எனவே மக்கள் கடவுளுக்கு அடுத்து நாடுவது சாமியார்களைத்தான். ஒரு சாமியார் தன்னை பக்தர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக எதையாவது செய்தாக வேண்டிய நிலை உள்ளது. அப்படிச் செய்தால்தான் தன்னை ஒரு சாமியார் என்று பக்தன் நம்புவான் என நினைக்கிறார் சாமியார்.
ஆனால் அதேசமயம், சாமியார்களும் கூட சாதாரண மனிதர்கள்தான். எனவே அவர்களையும் செக்ஸ் ஆசை தொட்டுச் செல்கிறது. அதுதான் நித்தியானந்தா விவகாரத்திலும் நடந்த்து.
எனவே கடவுளுக்கும், காமத்துக்கும் இடையிலான இந்த வித்தியாசங்களை வைத்து கதை பண்ணியுள்ளேன்.
என்.டி.திவாரி முதல், நித்தியானந்தா வரை, எஸ்.பி.எஸ். ரத்தோர் வரை காமத்திற்கு அடிமையாகாத யாரையுமே பார்க்க முடியாது. செக்ஸுக்கு இரையானவர்கள் இவர்கள். எனவே கடவுளை வென்றாலும் கூட உங்களால் காமத்தை வெல்ல முடியாது.
எனது படத்திற்கு நித்தியானந்தாவின் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்களா அல்லது இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பார்களா என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் எது நடந்தாலும் அது எனது படத்திற்கான நல்ல விளம்பரமாக அமையும்.
நித்தியானந்தா வீடியோவை நான் பார்த்தபோது அவரின் செக்ஸ் லீலைகள் என்னைக் கவரவில்லை. மாறாக அந்த நேரத்திலும் கூட கன்னட சினிமாப் பாடல்களை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாரே, அதுதான் என்னைக் கவர்ந்த்து.
நான்கு சுவர்களுக்குள் அவர் ஒரு மிகச் சாதாரண மனிதர். அந்த விஷயம்தான் என்னை கவர்ந்தது, இந்தப் படத்தை எடுக்கவும் யோசனையைத் தந்தது.
வெளியில் இவர்கள் பல கோடிகளை சந்திக்கிறார்கள். ஆனால் எங்கிருந்து இந்தப் பணம் வருகிறது என்பதை யாரும் கவனிப்பதே இல்லை. ஆனால் அவர்களது செக்ஸ் வாழ்க்கை குறித்துதான் அனைவரும் ஆவலுடன் படிக்கிறார்கள்.
எனது படத்தின் நாயகன் ரோலுக்கு யாரையும் நான் இன்னும் முடிவு செய்யவில்லை. என்றார் வர்மா.