Don't Miss!
- News நாங்க தான் அப்பவே சொன்னோம்ல.. ஓட்டுப் போட முடியாது..! தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள்..!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மாரடைப்பு.. கோல்மால் பட நடிகை மஞ்சு சிங் காலமானார்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்
மும்பை: பழம்பெரும் பாலிவுட் நடிகை மஞ்சு சிங் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 73.
1979ம் ஆண்டு வெளியான கோல்மால் இந்தி திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மஞ்சு சிங்.
தூர்தர்ஷனில் பிரபல டிவி நடிகையாகவும் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் பல ஆண்டுகள் பணியாற்றி உள்ளார் இவர்.
பாக்ஸ் ஆபிஸ் ஹிட்.. தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநரின் அடுத்த சம்பவம் லோடிங்.. டைட்டில் என்ன தெரியுமா?
மஞ்சு சிங்
1948ம் ஆண்டு பிறந்த மஞ்சு சிங் 1979ம் ஆண்டு இயக்குநர் ரிஷிகேஷ் முகர்ஜி இயக்கத்தில் வெளியான கிளாசிக் காமெடி திரைப்படமான கோல்மால் படத்தில் ரத்னா எனும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். பாலிவுட் படங்களை தாண்டி தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோ மற்றும் தொடர்களில் நடித்து பிரபலமானவர் மஞ்சு சிங்.
குழந்தைகளின் ஃபேவரைட்
தூர்தர்ஷனில் வெளியான Khel Khilone எனும் குழந்தைகளுக்கான ரியாலிட்டி ஷோவை 7 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடத்தி அசத்தியவர் மஞ்சு சிங். குழந்தைகள் இவரை அன்போடு திதி என்றே அழைப்பார்கள். ஸ்வராஜ், ஷோ டைம் உள்ளிட்ட ஏகப்பட்ட டிவி தொடர்களையும் இவர் தயாரித்து வழங்கி உள்ளார்.
மாரடைப்பு
தொலைக்காட்சியில் மிகப்பெரிய ஆளுமையாக பல ஆண்டுகள் கோலோச்சிய நடிகை மஞ்சு சிங் கடந்த வியாழக்கிழமை திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானதாக அவரது மகள் சுபர்ணா மீடியாக்களுக்கு தெரிவித்துள்ளார். ஏப்ரல் 14ம் தேதி காலை 10 மணியளவில் வீட்டிலேயே அவரது உயிர் பிரிந்ததாக தெரிவித்துள்ளார்.
இறுதி சடங்கு
சனிக்கிழமையான நேற்று நடிகை மஞ்சு சிங்கின் இறுதிச் சடங்கை குடும்பத்தினர் நடத்தினர். பாலிவுட் நடிகர்கள், இந்தி டிவி நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் மஞ்சு சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விருது பெற்ற எழுத்தாளர் ஸ்வனந்த் கிர்கிரே நடிகையின் மறைவுக்காக நீண்ட இரங்கல் மடல் ஒன்றையும் எழுதி உள்ளார்.
ரசிகர்கள் இரங்கல்
பழம்பெரும் டிவி நடிகையின் மறைவை அறிந்த பாலிவுட் ரசிகர்கள் அவரது மறைவை அறிந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி உள்ளனர். மகள் சுபர்ணா, ஷாலினி மற்றும் மகன் கெளதம் உடன் மும்பை வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், மாரடைப்பு காரணமாக மஞ்சு சிங் காலமானது பாலிவுட் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.