Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கோலி சோடா.. வெற்றிகரமான 50 நாள்!
பல பெரிய நடிகர்களின் படங்களே திரையரங்குகளை விட்டு ஓட்டம் பிடித்துக் கொண்டிருக்கும் சூழலில், நான்கு சின்னப் பையன்கள் நடித்த கோலி சோடா நல்ல வசூலுடன் 50வது நாளை எட்டியுள்ளது.
திரையுலக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோலி சோடா
பெரிய நட்சத்திர நடிகர்களோ, விளம்பரங்களோ இல்லாமல் கடந்த ஜனவரி மாதம் வெளியானது 'கோலி சோடா'.
பொங்கல் படங்கள்
அப்போது விஜய், அஜீத் படங்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்தப் படம் வெற்றிகரமாக ஓட ஆரம்பித்தது.
விஜய் மில்டன்
ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான எஸ்.டி.விஜய் மில்டனின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்தப் படம் தங்களுடைய சொந்த அடையாளத்தை உருவாக்கப் பாடுபட்ட நான்கு சிறுவர்களைப் பற்றிய கதையாகும்.
வசூல்
வெறும் வாய் விளம்பரங்களே இந்தப் படத்தின் உயர்வுக்குக் காரணமாக இருந்துள்ளது. நல்ல விமர்சனங்களைப் பெற்றதுடன் இந்தப் படம் பாக்ஸ் ஆபிசிலும் நல்ல வசூலைப் பெற்றுள்ளது.
முதல் வெற்றி
2014 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பெரிய வெற்றி பெற்ற படம் என்ற பெருமை கோலி சோடாவுக்குக் கிடைத்துள்ளது. அதிகபட்சம் ரூ 2 கோடிதான் இந்தப் படத்தின் பட்ஜெட். ஆனால் இதுவரை 12 கோடி வசூலித்துள்ளது.
50 நாட்கள்
இப்போது 50 நாட்களைத் தாண்டிய நிலையிலும் குறிப்பிடத்தக்க வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது கோலி சோடா.
இரண்டாம் பாகம்
இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கவிருப்பதாகக் குறிப்பிட்ட இயக்குனர் விஜய் மில்டன், தன்னுடைய பத்தாண்டு கால திரையுலக வாழ்க்கையில் இதுவே மிகப்பெரிய வெற்றி என்கிறார்.