Don't Miss!
- News சிவில் சர்வீஸ் தேர்வில் 9வது முயற்சியில் தூய்மை பணியாளர் மகன் வெற்றி.. கலங்க வைத்த ரியல் ஸ்டோரி
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கோலி சோடா சாந்தினியை ஞாபகம் இருக்கா.. அந்த பெண்ணுக்கு திருமணமாகி.. குழந்தையே பிறந்துடுச்சாம்!
சென்னை: இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான கோலி சோடா படத்தில் ஸ்கூல் பெண்ணாக நடித்த நடிகை சாந்தினிக்கு திருமணமாகி ஒரு வயதில் குழந்தையே இருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
விஜய் மில்டன் இயக்கிய கோலி சோடா படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
அந்த படத்தில் ஹீரோயினாகவும் ஸ்கூல் பெண்ணாகவும் சாந்தினி எனும் அறிமுக நடிகை நடித்திருந்தார்.
வாய்ப்பு கேட்டால் மிட்நைட்ல கால் பண்றாங்க...வேதனையில் புலம்பிய நடிகை!
வாய்ப்பு கிடைத்தது எப்படி
கோலி சோடா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாந்தினி. சென்னையிலேயே பிறந்து வளர்ந்து படித்து வந்த சாந்தினி ஹெத்திராஜ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, அந்த பெண் நம்ம படத்துக்கு கரெக்ட்டா இருப்பா என நினைத்த விஜய் மில்டன் அவரை ஃபாலோ செய்துள்ளார். விஜய் மில்டன் அவரிடம் நெருங்குவதை பார்த்த சாந்தினி இடியட் அறிவில்லை.. இப்படியா ஒரு பொண்ணை ஃபாலோ பண்ணுவ என திட்டி உள்ளார். பின்னர் அவர் வீட்டுக்கே சென்று பெற்றோர்களிடம் பேசி இந்த படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்துள்ளதாக சுவாரஸ்ய கதை ஒன்று உள்ளது.
சில படங்களில்
கோலி சோடா படத்தில் ஸ்கூல் யூனிஃபார்மில் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட சாந்தினி அடுத்து சியான் விக்ரம் நடிப்பில் விஜய் மில்டன் இயக்கிய பத்து எண்றதுக்குள்ள படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஜீவாவின் சீறு படத்திலும் இவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் ஹீரோயினாக இவர் நடித்த குரங்கு கையில பூமாலை சொதப்பி விடவே சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்தார்.
திருமணம் ஆகிடுச்சு
ஆனால், நீண்ட காலம் சினிமாவுக்கெல்லாம் இவர் காத்திருக்கவில்லை. உடனடியாக திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் இணைந்து விட்டார் சாந்தினி. அவரது கணவர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்த சாந்தினி சமீபத்தில் தனது குழந்தையின் போட்டோக்களை போட்டதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு திருமணம் ஆகி, குழந்தையே பிறந்துடுச்சா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒரு வயசுல குழந்தை
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது குழந்தையின் முதலாம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சாந்தினி குழந்தையை முதன் முதலாக கையில் ஏந்திய போட்டோவையும் சமீபத்திய போட்டோவையும் போட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.