Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ரஜினிகாந்தின் 'அண்ணாத்தே'வில் மெயின் வில்லனாக நடிக்கிறாரா..? என்ன சொல்கிறார் இந்த தெலுங்கு ஹீரோ?
சென்னை: ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிப்பது பற்றி பிரபல தெலுங்கு ஹீரோ விளக்கம் அளித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம், தர்பார். இதில் அவர் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
இந்தி நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்து வரும் படம், அண்ணாத்தே.
இது சாம்பிள் சம்பவம்தான்.. மெயின் பிக்ச்சர் மே 1 இருக்கு.. தெறிக்கவிடும் அஜித் ஃபேன்ஸ்!
நயன்தாரா
சிறுத்தை சிவா இயக்குகிறார். இது ரஜினிகாந்துக்கு 168-வது படம். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரிக்கிறது. ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், வேல ராமமூர்த்தி, ஶ்ரீமன் உட்பட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்தது.
கொரோனா வைரஸ்
அடுத்தக் கட்டப் படப்பிடிப்பை கொல்கத்தா, புனே உள்ளிட்ட வட மாநிலங்களில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். அதற்குள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கொரோனா உலகம் முழுவதும் ஒன்றரை லட்சம் பேரை பலி வாங்கியுள்ளது. இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த வைரஸுக்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அதிகரித்து வருகிறது
இந்த நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 507 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் இதன் பாதிப்பு அதிகரித்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கோபிசந்த்
இந்தப் பிரச்னை முழுமையாக முடிந்த பிறகுதான் சினிமா, டிவி படப்பிடிப்புகள் தொடங்கப்பட இருக்கின்றன. இதற்கிடையே, ரஜினிகாந்தின் அண்ணாத்தே படத்தில் பிரபல தெலுங்கு ஹீரோ கோபிசந்த் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. இவர், தமிழில், ஜெயம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
நடிக்கவில்லை
இந்நிலையில் தான் ரஜினிகாந்தின் அண்ணாத்தே படத்தில் வில்லனாக நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார், கோபிசந்த். இயக்குனர் சிறுத்தை சிவா என் நண்பர். அண்ணாத்தே படத்துக்குப் பிறகு அவர் என்னை வைத்து படம் இயக்க உள்ளார். எனக்காக அவர் கதை உருவாக்க இருக்கிறார். இந்த தகவலை சிலர் தவறாகக் கூறி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.