Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சிக்ஸரில் என்னை அசிங்கப்படுத்திட்டாங்க... வக்கீல் நோட்டீஸ் விட்ட கவுண்டமணி
Recommended Video
சென்னை: தன்னுடைய அனுமதி பெறாமல் தன்னுடைய வசனங்களையும் புகைப்படங்களையும் பயன்படுத்தியதற்காக சிக்ஸர் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, காமெடி நடிகர் கவுண்டமணி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நடிகர் கவுண்டமணி, காமெடி நடிகர்களிலேயே சற்று வித்தியாசமானவர். தன் திரைப்படங்களில் நடிப்பதோடு சரி. இதைத் தவிர வேறு பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ள விரும்பமாட்டார். அதை அவர் விரும்புவதும் கிடையாது. யாராவது மிகவும் நெருங்கிய நண்பர்கள் வட்டாரம் விரும்பி வேண்டிக்கொண்டால் மட்டுமே அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதுண்டு.
இவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்தது முதல் இன்று வரையிலும் அதிகபட்சமாக 10 அல்லது 15 பொது நிகழ்ச்சிகளில் தான் கலந்து கொண்டிருப்பார். அட, இவ்வளவு ஏன், இவர் நடித்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் கூட கலந்துகொண்டது கிடையாது.
பொது நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ளாததற்கு சொல்லும் காரணம், நம்முடைய வேலை நடிப்பது மட்டுமே. அதை விட்டுவிட்டு, இந்த கடை திறப்பு விழா, காதணி விழான்னு அடிக்கடி போய்க்கிட்டு இருந்தா நம்மள ஒருத்தணும் மதிக்க மாட்டான் என்பது தான்.
இரும்புத்திரை 2: விஷாலுக்கு குளு குளு ஷ்ரத்தா ஸ்ரீநாத் கவர்ச்சிக்கு ரெஜினா கசாண்ட்ரா
இந்த கொள்கையை கவுண்டமணி இன்று வரையிலும் கடைபிடித்து வருகிறார். இதனால் தான் இன்றளவும் இவருடைய காமெடிக்கு இன்றைக்கும் மதிப்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல், இவருடைய காமெடியை வைத்துத் தான் சமூக வலைதளங்கள் அனைத்தும் மீம்ஸ்கள் உருவாக்கி தெறிக்கவிடுகின்றன.
நிலைமை இவ்வாறு இருக்க, நடிகர் வைபவ் நடிப்பில் இன்று வெளியான சிக்ஸர் படத்தில் கவுண்டமணியை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 1991ஆம் ஆண்டில் நடிகர் பிரபு, குஷ்பு, கவுண்டமணி மூவரின் நடிப்பில் வெளியான சின்னத்தம்பி படத்தில், கவுண்டமணி மாலைக் கண் குறைபாடு உள்ளவராக நடித்திருந்தார். தற்போது நேற்று வெளியான சிக்ஸர் படத்தில் நாயகன் வைபவும் மாலைக் கண் குறைபாடு உள்ளவராக நடித்துள்ளது, தன்னை இழிவு படுத்துவதாக உள்ளது என்று மனம் வருந்தி உள்ளார்.
இதனையடுத்து, சிக்ஸர் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு கவுண்டமணியின் சார்பாக வழக்கறிஞர் கே.சசிகுமார் மூலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் சிக்ஸர் படத்தில் கவுண்டமணியின் அனுமதி பெறாமல் அவருடைய புகைப்படத்தையும், வசனங்களையும் பயன்படுத்தியதாகவும், அவரை இழிவுபடுத்தும்படியான வசனங்களும் அமைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திரு. கவுண்டமணி அவர்களின் அனுமதி பெறாமல் அவருடைய புகைப்படத்தையும் வசனங்களையும் 'சிக்ஸர்' என்ற திரைப்படத்தில் தவறான முறையில் அவதூறாக பயன்படுத்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திரு.கவுண்டமணி அவர்களின் வழக்கறிஞர் திரு. க.சசிகுமார் அவர்கள் அனுப்பிய நோட்டீஸ். pic.twitter.com/VySuEv4S3L
— Nikkil (@onlynikil) August 29, 2019
சிக்ஸர் படத்தில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட அந்த காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், உடனடியாக பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதனை அவர்கள் செய்யாத பட்சத்தில், சிக்ஸர் படத்தயாரிப்பாளர்கள் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிக்ஸர் படத்தில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட காட்சிகள், படத்திலிருந்து நீக்கப்படுமா என்பது பற்றியும், இந்த நோட்டீஸுக்கான விளக்கமும் கூடிய விரையில் தயாரிப்பாளர்களின் சார்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.