Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எங்கள் பிரிவுக்கு ஸ்ருதி- அக்ஷரா காரணமல்ல!- கௌதமி
கமல் ஹாஸனை விட்டு நான் பிரிந்ததற்கு ஸ்ருதியோ, அக்ஷராவோ காரணமல்ல என்று கூறியுள்ளார் நடிகை கௌதமி.
இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், "எங்களிடையே நிகழ்ந்து இருக்கும் இந்த பிரிவு குறித்து நாங்கள் வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே இருந்திருக்கலாம். ஆனால் நான் பொது வாழ்க்கையில் இருக்கும் பெண். பொது வாழ்க்கை என்றால் எல்லாம் பொதுவானதுதான். எதையும் மறைத்து எத்தனை நாளுக்கு வாழ முடியும். என் வாழ்க்கை மாற்றங்கள் குறித்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. 16 வயதில் சினிமாவுக்கு வந்தேன். சுய சிந்தனையில் இவ்வளவு உயரம் தொட்டேன். இப்போது என் மகளுக்காக நிறைய யோசிக்க வேண்டியுள்ளது. அதனால் பிரிகிறேன். மாற்றத்துக்காக எல்லோரும் மன உளைச்சலை சந்தித்துதான் ஆக வேண்டும்.
இனி மகளின் எதிர்காலம் பற்றித்தான் யோசிப்பேன். இது பற்றி விரிவாக பேச முடியாது.
ஷ்ருதி ஹாசன், அக்ஷரா இடம் வேறு. என் இடம் வேறு. அவர்களை எதிர்க்க நான் யார்? எப்போதும் அவர்களுக்கு ஆதரவாக இருந்து இருக்கிறேன். பக்க பலமாகவும் இருந்து வந்திருக்கிறேன். காரணம் அதுவல்ல," என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடியைச் சந்தித்த பிறகு இந்த முடிவை எடுத்தீர்களா? என்ற கேள்விக்கு, "இது ஏற்கெனவே எடுத்த முடிவு. பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். இரண்டையும் தொடர்புப் படுத்த வேண்டாம்," என்றார்.