Don't Miss!
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- News இந்த ஆண்டு UPSC தேர்வானவர்களில் 34.65% பெண்கள், 5.02% முஸ்லிம்கள்.. முழு டேட்டா இதோ!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
எங்கள் பிரிவுக்கு ஸ்ருதி- அக்ஷரா காரணமல்ல!- கௌதமி
கமல் ஹாஸனை விட்டு நான் பிரிந்ததற்கு ஸ்ருதியோ, அக்ஷராவோ காரணமல்ல என்று கூறியுள்ளார் நடிகை கௌதமி.
இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், "எங்களிடையே நிகழ்ந்து இருக்கும் இந்த பிரிவு குறித்து நாங்கள் வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே இருந்திருக்கலாம். ஆனால் நான் பொது வாழ்க்கையில் இருக்கும் பெண். பொது வாழ்க்கை என்றால் எல்லாம் பொதுவானதுதான். எதையும் மறைத்து எத்தனை நாளுக்கு வாழ முடியும். என் வாழ்க்கை மாற்றங்கள் குறித்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. 16 வயதில் சினிமாவுக்கு வந்தேன். சுய சிந்தனையில் இவ்வளவு உயரம் தொட்டேன். இப்போது என் மகளுக்காக நிறைய யோசிக்க வேண்டியுள்ளது. அதனால் பிரிகிறேன். மாற்றத்துக்காக எல்லோரும் மன உளைச்சலை சந்தித்துதான் ஆக வேண்டும்.
இனி மகளின் எதிர்காலம் பற்றித்தான் யோசிப்பேன். இது பற்றி விரிவாக பேச முடியாது.
ஷ்ருதி ஹாசன், அக்ஷரா இடம் வேறு. என் இடம் வேறு. அவர்களை எதிர்க்க நான் யார்? எப்போதும் அவர்களுக்கு ஆதரவாக இருந்து இருக்கிறேன். பக்க பலமாகவும் இருந்து வந்திருக்கிறேன். காரணம் அதுவல்ல," என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடியைச் சந்தித்த பிறகு இந்த முடிவை எடுத்தீர்களா? என்ற கேள்விக்கு, "இது ஏற்கெனவே எடுத்த முடிவு. பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். இரண்டையும் தொடர்புப் படுத்த வேண்டாம்," என்றார்.