Don't Miss!
- News IQவை டெஸ்ட் செய்யலாமா? இந்த படத்தில் குகை மனிதருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு மனித முகம்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
'என் படத்துக்கு வரிவிலக்கு கொடுத்துட்டாங்க... பொய்யான நியூஸை ஏன் போடறீங்க!'
ராதிகா தயாரிப்பில், சரத்குமார், சேரன், பிரசன்னா, பிரகாஷ்ராஜ் உள்பட பலரும் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம் சென்னையில் ஒருநாள்.
தரமான படம் என பலராலும் பாராட்டப்படும் இந்தப் படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிக்கவில்லை என்றும், காரணம் சன் டிவி நல்லாசியுடன் என்று குறிப்பிட்டு படத்தை விளம்பரப்படுத்தியதுதான் என்றும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் சென்னையில் ஒரு நாள் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள இன்று ராடான் மீடியா அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர் சரத்குமார் உள்ளிட்ட படக் குழுவினர்.
அப்போது, படத்தின் வரிவிலக்கு விவகாரம் குறித்து கேட்டபோது, "இதில் கொஞ்சமும் உண்மையில்லை. இப்படியெல்லாம் கூடவா யோசித்து செய்தி எழுதுவார்கள்...!
இந்தப் படத்துக்கு அரசு வரிவிலக்கு கொடுத்துவிட்டது. என்னிடம் அதற்கான ஆவணங்கள் அனைத்தும் உள்ளன. வதந்திகளை நம்பி இப்படியெல்லாம் எழுதாதீங்க," என்றார்.
இந்தப் படத்தின் கதைக்கு மூல காரணமே, சென்னையில் விபத்தில் இறந்த ஹிதேந்திரன்தான். அவன் பெயரை டைட்டிலில் குறிப்பிட விரும்பினார்களாம் சென்னையில் ஒரு நாள் படக்குழுவினர். ஆனால் ஹிதேந்திரன் குடும்பத்தினர் விரும்பாததால் குறிப்பிடவில்லையாம்.