Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'என் படத்துக்கு வரிவிலக்கு கொடுத்துட்டாங்க... பொய்யான நியூஸை ஏன் போடறீங்க!'
ராதிகா தயாரிப்பில், சரத்குமார், சேரன், பிரசன்னா, பிரகாஷ்ராஜ் உள்பட பலரும் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம் சென்னையில் ஒருநாள்.
தரமான படம் என பலராலும் பாராட்டப்படும் இந்தப் படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிக்கவில்லை என்றும், காரணம் சன் டிவி நல்லாசியுடன் என்று குறிப்பிட்டு படத்தை விளம்பரப்படுத்தியதுதான் என்றும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் சென்னையில் ஒரு நாள் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள இன்று ராடான் மீடியா அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர் சரத்குமார் உள்ளிட்ட படக் குழுவினர்.
அப்போது, படத்தின் வரிவிலக்கு விவகாரம் குறித்து கேட்டபோது, "இதில் கொஞ்சமும் உண்மையில்லை. இப்படியெல்லாம் கூடவா யோசித்து செய்தி எழுதுவார்கள்...!
இந்தப் படத்துக்கு அரசு வரிவிலக்கு கொடுத்துவிட்டது. என்னிடம் அதற்கான ஆவணங்கள் அனைத்தும் உள்ளன. வதந்திகளை நம்பி இப்படியெல்லாம் எழுதாதீங்க," என்றார்.
இந்தப் படத்தின் கதைக்கு மூல காரணமே, சென்னையில் விபத்தில் இறந்த ஹிதேந்திரன்தான். அவன் பெயரை டைட்டிலில் குறிப்பிட விரும்பினார்களாம் சென்னையில் ஒரு நாள் படக்குழுவினர். ஆனால் ஹிதேந்திரன் குடும்பத்தினர் விரும்பாததால் குறிப்பிடவில்லையாம்.