Don't Miss!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
புதிய சட்டசபை திறப்பு விழா: ரஜினி-கமலுக்கு அழைப்பு!
அழைப்பிதழை தமிழக செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதியே நேரில் சென்று கொடுத்தார்.
தமிழக அரசின் புதிய சட்டசபைக் கட்டடத்துக்கான பணிகள் 2007-ம் ஆண்டு துவங்கின. முதல்வர் கருணாநிதியின் கனவுத் திட்டம் இந்த புதிய சட்டசபை வளாகம்.
திட்டமிட்டபடி மிகச் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது இந்தக் கட்டடம். வருகிற மார்ச் 13-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இந்தக் கட்டடத்தைத் திறந்து வைக்கிறார்கள். இவர்களுக்கு துணை முதல்வர் முக ஸ்டாலின் டெல்லிக்கு நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினார்.
இப்போது தலைநகர் சென்னையில் உள்ள முக்கிய பிரமுகர்களை அழைப்பதில் மும்முரமாக உள்ளது தமிழக அரசு.
முதல்வர் கருணாநிதி சார்பில் தமிழக செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி இந்த அழைப்பிதழ்களை நேரில் கொடுத்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் முதல்நிலை நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாஸனுக்கு இன்று அழைப்பிதழ்களை வழங்கினார் பரிதி இளம்வழுதி.
இருவரும் நிச்சயம் இந்த விழாவில் பங்கேற்பதாக அவரிடம் தெரிவித்தனர்.