Don't Miss!
- Finance 7.50 லட்சம் கோடி ரூபாயை நிதி திரட்டும் மத்திய அரசு.. எதற்காக தெரியுமா..?
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சாப்பாடுக்கே வழியில்லாத நிலை.. நாடக, கூத்துக் கலைஞர்களுக்கு உதவ கருணாஸ் எம்.எல்.ஏ கோரிக்கை!
சென்னை: நாடக மற்றும், கூத்துக்கலைஞர்களுக்கு உதவ நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
சீனாவின் வுஹானில் உருவான கொரொனா வைரஸ், இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது.
அமெரிக்கா, இத்தாலி, ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹாலிவுட்டா..கோலிவுட்டா..கிரியேட்டர்களின் புது முயற்சி... டிரெண்டாகும் போஸ்டர் !
எண்ணிக்கை
இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இருந்தாலும் இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8473 ஆக உயர்ந்துள்ளது. 273 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
கருணாஸ் அறிக்கை
இந்நிலையில், முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான நடிகர் கருணாஸ், நாடகம், கூத்து உள்ளிட்ட நாட்டுபுறக் கலைஞர்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகெங்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்ற நிலையில், உலக நாடுகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
போதாத நிலை
இந்தியாவிலும் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் தமிழக மக்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கத் தொடங்கி விட்டார்கள் என்பது அரசு அறிந்ததே. தமிழ்நாடு அரசு ஒவ்வொரு குடும்பங்களுக்கும் நிதி உதவிகளை உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை செய்தாலும் அது அவர்களுக்கு போதாத நிலையிலேயே உள்ளன.
கூத்துக் கலைஞர்கள்
தமிழகத்தில் குடும்ப அட்டைகள் இல்லாத எத்தனையோ குடும்பங்கள் அரசு உதவிகளை பெறாமல் இருக்கின்றன. நாடகக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கூத்துக் கலைஞர்கள் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், எந்த உதவிகளும் பெறாமல் இருக்கின்றனர். சாப்பாட்டுக்கே வழி இல்லாத நிலைக்கு அவர்கள் தள்ளப்படும் அபாயம் இருக்கிறது. ஆகவே தமிழக முதல்வர், நாடகக் கலைஞர்கள், நாட்டுப்புற கூத்துக்கலைஞர்கள் ஆகியோருக்கு ஊடனடியாக அரிசி உள்ளிட்ட, அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.