Don't Miss!
- Finance ஸ்மார்ட் போன் வாங்கப் போறீங்களா? ரூ.60,000க்கு கீழ் கிடைக்கும் உயர்ரக பிராண்டட் போன்கள்..
- News தமிழ்நாட்டில் பாஜக வலுவாகிறது.. தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்த போகிறது.. பிரதமர் மோடி
- Lifestyle இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Automobiles பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
கிரகலட்சுமி-வேணுபிரசாத் ஆஜர்
நடிகர் பிரஷாந்தை இரண்டாவது திருமணம் செய்த கிரகலட்சுமியும், அவரது முதல் கணவர் வேணு பிரசாத்தும் விவகாரத்து வழக்கில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
இதையடுத்து வேணுபிரசாத், தனக்கும் கிரஹலட்சுமிக்கும் திருமணம் நடந்ததை போலீசில் ஒப்புக் கொண்டார். இந்த திருமண மோசடி வழக்கில் கைதாகாமல் தப்ப கிரகலட்சுமி குடும்பத்தோடு முன் ஜாமீன் வாங்கியுள்ளார்.
இதற்கிடையில் முதல் கணவரான வேணுபிரசாத், தனக்கு 2வது திருமணம் ஆகிவிட்டபடியால் முறைப்படி முதல் மனைவியான கிரகலட்சுமியிடம் இருந்து விவகாரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குத் தொடர்பாக கிரகலட்சுமி, வேணுபிரசாத் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது கிரகலட்சுமி சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதி தேவதாஸ், வரும் ஆகஸ்ட் 24ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதற்கிடையே கிரஹலட்சுமியிடம் இருந்து விவகாரத்து கோரி பிரஷாந்த் தாக்கல் செய்த வழக்கு வரும் ஆகஸ்ட் 3ம் தேதி விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.