Don't Miss!
- News ‛‛பானை சின்னம் கிடையாது’’.. உறுதியான கூறிய தேர்தல் ஆணையம்.. திருமாவின் விடுதலை சிறுத்தைகள் ஷாக்
- Sports எங்களை ஏமாற்ற பார்க்காதீங்க! நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனி.. GT போட்டியில் நடந்தது என்ன?
- Lifestyle உங்க தலையணை இந்த மாதிரி இருந்தா நீங்க தலைவலி முதல் பல ஆபத்தான பிரச்சினைகள் வரை சந்திக்க வேண்டியிருக்குமாம்...!
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவதுகூட முட்டாள்தனம் - ரகுராம் ராஜன்
- Automobiles 6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
என்.ஜி.கே. மேனரிசம் செய்து செல்வராகவனுக்கே கெத்து காட்டிய பாட்டி: வைரல் வீடியோ
Recommended Video
சென்னை: ஒரு பாட்டி என்.ஜி.கே. மேனரிசம் செய்யும் டிக்டாக் வீடியோ செல்வராகவனை வியக்க வைத்துள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான என்.ஜி.கே. படம் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் தான் வெற்றி நடை. பிற மாநிலங்களில் என்.ஜி.கே.வுக்கு சுமாரான ஆதரவே கிடைத்துள்ளது.
காரணம் படத்தின் கதை யாருக்கும் புரியவில்லையாம். கேரளாவில் சூர்யா சேட்டனுக்காக தியேட்டருக்கு சென்ற ரசிகர்கள், ரசிகைகள் கதை புரியவில்லை என்று கூறி புலம்பியுள்ளனர்.
இந்நிலையில் ஒரு பாட்டியும், பேரனும் சேர்ந்து டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் அந்த இருவரும் என்.ஜி.கே. படத்தில் சூர்யா செய்யும் மேனரிசத்தை செய்துள்ளனர். பேரனை விட பாட்டி மாஸ் காட்டி நெட்டிசன்களை கவர்ந்துவிட்டார்.
அந்த வீடியோவை பலரும் ட்விட்டரில் ஷேர் செய்து வருகிறார்கள். இந்நிலையில் அந்த வீடியோ செல்வராகவன் கண்ணில் பட அவரோ அதை பார்த்து ரசித்துவிட்டு வாவ் என்று கமெண்ட் போட்டுள்ளார்.
Wow!!! https://t.co/y7dWawUOGA
— selvaraghavan (@selvaraghavan) June 4, 2019
என்.ஜி.கே. படத்தை கழுவிக் கழுவி ஊத்துவோர் ஊத்தினாலும் பாராட்டுபவர்கள் பாராட்டத் தான் செய்கிறார்கள். அப்படி என்.ஜி.கே. படத்திற்கு ஆதரவளித்துள்ளவர்களுக்கு செல்வராகவன் நன்றி தெரிவித்துள்ளார்.
என்.ஜி.கே. படம் யாருக்கு பிடித்துள்ளதோ இல்லையோ சூர்யா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. எந்த அளவுக்கு பிடித்துள்ளது என்றால் இரண்டாம் பாகம் கேட்கும் அளவுக்கு பிடித்துள்ளது.
சுயாட்சி கேட்கும் ரஹ்மான்?: தலக்கு தில்ல பாத்தியா
சூர்யா ரசிகர்கள் என்.ஜி.கே. 2 வேண்டும் என்று ட்விட்டரில் கோரிக்கை விடுத்து வருவதை பார்த்த பிற ரசிகர்களோ அடப்பாவிகளா, உங்க பாசத்திற்கு ஒரு அளவே இல்லையா. என்.ஜி.கே. படத்தையே பார்க்க முடியவில்லை இதில் இரண்டாம் பாகம் வேறு கேட்கிறீர்களே என்று விமர்சித்துள்ளனர்.
செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க 19 ஆண்டுகளாக காத்திருந்ததாக ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் சூர்யா தெரிவித்தார். இந்நிலையில் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று செல்வராகவனும், சூர்யாவும் மீண்டும் சேர்ந்து பணியாற்றுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். காத்திருப்போம்.