Don't Miss!
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Finance 290% லாபம் தந்த கட்டுமான நிறுவனம்.. விஜய் கேடியா விற்பனை செய்த பங்குகளை வாங்கலாமா..!!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இளையராஜாவை பாராட்டும் இசைக் கலைஞர்கள்... அழைக்கும் தீனா
சென்னை: இளையராஜாவுக்கு நன்றி செலுத்துவது ஒவ்வொரு இசைக்கலைஞனின் கடமையாகும். அவருக்கு நடக்கும் பாராட்டு விழாவில் அனைத்து இசைக்கலைஞர்களும் கலந்துகொண்டு அவரை வாழ்த்துமாறு இசையமைப்பாளர் தீனா கேட்டுக்கொண்டுள்ளார்.
இசைஞானி இளையராஜா என்றாலே இசை, இசை என்றாலே இளையராஜா அவர்கள் தான், என்ற அளவிற்கு இந்த உலகையே தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்த மாமேதை. எந்த ஒரு உணர்வாக இருந்தாலும் எந்த நேரத்திலும் நமக்கு துணையாய் இருப்பது இசைஞானியின் இசையே.
அன்னக்கிளியில் ஆரம்பித்த அவரது திரையுலக பயணம் இன்று மட்டுமல்ல, இந்த உலகம் உள்ள வரை அவரது இசை மூலம் நம்முடன் பயணித்துக்கொண்டே இருக்கும். அவரின் இந்த கலை சேவை பாராட்டுக்குரியது.
westandwithdhanush:சம்பள பிரச்சினை... தனுஷுக்காக தானா சேர்ந்த கூட்டம்... நாளுக்குநாள் பெருகும் ஆதரவு
மதிப்பிற்குரிய இசைஞானி பத்மவிபூஷன் இளையராஜா அவர்களது கலைச் சேவையை பாராட்டி நன்றி தெரிவிக்கும் வண்ணம் செப்டம்பர் 1ஆம் தேதி ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி திரை இசைக் கலைஞர்கள் சங்கத்தில் காலை 11 மணிக்கு நடக்கவிருக்கிறது. அவருக்கு நன்றி செலுத்துவது ஒவ்வொரு இசைக்கலைஞனின் முதற்கண் கடமையாகும். இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு இசைஞானி இளையராஜாவை பாராட்டி வாழ்த்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மனதார வாழ்த்து தெரிவிக்குமாறு இசையமைப்பாளர் தினா அழைப்பு விடுத்துள்ளார்.