ஜிஎஸ்டி கேட்கும் அரசே, இயக்குனர் சேரன் சொல்வதை செய்யத் தயாரா?
சென்னை: ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்துள்ள நேரத்தில் இயக்குனர் சேரன் சரியான பரிந்துரையை செய்துள்ளார்.
ஒரே தேசம், ஒரே வரி என்று கூறி மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. அதில் இருந்து கடைக்கு செல்லவே மக்கள் பதறுகிறார்கள்.

வாங்கும் பொருட்களின் விலையை விட வரியை பார்த்தால் பலருக்கு நெஞ்சு வலியே வந்துவிடும் போலிருக்கு. இதனால் எந்த பொருளையும் வாங்க மக்கள் பல முறை யோசிக்கிறார்கள்.
இந்நிலையில் இயக்குனர் சேரன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
தொழில் செய்கிறபோது வரிசெலுத்துபவர்களை வருமானம் இல்லாதபோது அரசு பாதுகாக்க திட்டம் வேண்டும்..அப்போதே எல்லோரும் வரி கட்ட வேண்டும் என நினைப்பார்கள் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











