Don't Miss!
- Finance சென்னை-க்கு ஓடி வந்த அம்பானி..! புதிய பிஸ்னஸ், சியோமி உடன் போட்டியா..?
- News மதம் Vs மக்கள் திட்டங்கள்: பாஜகவின் கடலோர கர்நாடகா கோட்டையின் 3 தொகுதிகளை வேட்டையாடுமா காங்கிரஸ்?
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சினிமாவும், நடிகர்களும் நாசமாகப் போகட்டும்: இது ஜிஎஸ்டி சாபம்
சென்னை: ஜிஎஸ்டி வரியால் தியேட்டர்களுக்கு செல்லும் கூட்டம் வெகுவாக குறையும்.
அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கஷ்டப்பட்டு எடுக்கப்படும் படங்களை தியேட்டர்களில் பார்க்கும் கூட்டம் குறைந்து வருகிறது. இந்நிலையில் ஒரே தேசம் ஒரே வரி என்று கூறி மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியுள்ளது.
சினிமா தியேட்டர்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.
வரி
ஜிஎஸ்டி வரியால் சினிமா டிக்கெட்டுகளின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அட போங்கய்யா நீங்களும், உங்களின் வரியும் என்று கோபம் அடைந்துள்ளனர்.
சினிமா
ஆசைப்பட்டு தியேட்டருக்கு செல்பவர்களை, வேண்டாம் வீட்டிலேயே திருட்டு டிவிடியில் படம் பாருங்கள் என்று தூண்டுவது போன்று இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு அமைந்துள்ளது.
நாசம்
இந்த சினிமாவும், நடிகர்களும் நாசமாக போகட்டும் என்று சாபம் விட்டது போன்று உள்ளது மத்திய அரசின் இந்த வரிவிதிப்பு. புதிய இந்தியா பிறக்கிறது என்று மோடி கடந்த நவம்பர் மாதம் தெரிவித்தபோது அவரை வாழ்த்திய திரையுலகினருக்கு ஜூலை மாதம் அவர்கள் தலையில் இடிவிழப் போவது தெரியாமல் போய்விட்டது.
கூட்டம்
கஷ்டப்பட்டு எடுக்கப்படும் சினிமா படங்களை தியேட்டரில் குடும்பத்துடன் பார்ப்பவர்களின் எண்ணிக்கை இனி வெகுவாக குறையும். கேபிள் டிவியில் படம் போட்டால் பார்த்துக் கொள்வோம், தியேட்டருக்கு செலவு செய்யும் காசை வேறு எதற்காவது உறுப்படியாக செலவு செய்யலாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர் மக்கள்.