கோஹ்லி-அனுஷ்கா திருமணத்தை இத்தாலியில் நடத்த ஐடியா கொடுத்தது யார் தெரியுமா?
மும்பை: கோஹ்லி, அனுஷ்காவின் திருமணம் இந்தியாவில் இல்லாமல் இத்தாலியில் நடத்த ஐடியா கொடுத்தது யார் என்று தெரிய வந்துள்ளது.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். ஏன் இந்தியாவில் எல்லாம் மண்டபம் கிடைக்கவில்லையா என்று நெட்டிசன்ஸ் கேட்கிறார்கள்.
அவர்களின் கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.

காமெடி
இந்தியாவில் உங்களின் திருமணம் நடந்தால் காமெடியாக்கிவிடுவார்கள். அதனால் இத்தாலியில் நடத்துங்கள் நிம்மதியாக திருமணம் செய்யலாம் என்று அனுஷ்காவுக்கு அவரது ஆஸ்தான இயக்குனர் ஐடியா கொடுத்துள்ளார்.

இத்தாலி
அனுஷ்காவின் ஆஸ்தான இயக்குனர் ஆதித்யா சோப்ரா. எதுவாக இருந்தாலும் அனுஷ்கா அவரிடம் தான் ஆலோசனை கேட்பார். அப்படி அவர் சொன்னதை கோஹ்லியிடம் தெரிவித்து கல்யாணத்தை இத்தாலியில் நடத்த வைத்துள்ளார் அனுஷ்கா.

திருமணம்
ஆதித்யா சோப்ராவுக்கும், பாலிவுட் நடிகை ராணி முகர்ஜிக்கும் இத்தாலியில் தான் திருமணம் நடந்தது. இதையடுத்து தான் ஆதித்யா அனுஷ்காவுக்கும் அந்த ஐடியா கொடுத்துள்ளார்.

புகைப்படம்
இத்தாலியில் திருமணம் நடத்தினால் மீடியா பிரச்சனை இருக்காது, யாரும் அத்துமீறி உள்ளே வர மாட்டார்கள், நிம்மதியாக இருக்கலாம் என்பதால் கோஹ்லியும் ஒப்புக் கொண்டாராம்.


Click it and Unblock the Notifications











