Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
தமிழன்கிட்ட அவ்வளவு எளிதா நம்ம கட்சிய கொண்டு சேர்க்க முடியாது: அடங்காதே ஜி.வி.
கூர்மையான வசனங்கள் அடங்காதே படத்தில் உள்ளதாக ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை: அடங்காதே திரைப்படத்தில் கூர்மையான வசனங்கள் இருக்கும் என நடிகர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
ஷண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள அடங்காதே திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
இப்பட விழாவில் பேசிய நடிகர் யோகிபாபு ஜி.வி.பிரகாஷும் நானும் அண்ணனும் தம்பியும் மாதிரி, எனக்கு அதிகமாக பேசவராது நன்றி என விடை பெற்றுக் கொண்டார்.
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் பேசும்போது மிகப்பெரிய நடிகரான சரத்குமார் படக்குழுவினருடன் குடும்பத்து உறுப்பினர்போல் பழகியதாகவும், உண்மையில் அவர் ஒரு குழந்தை மாதிரி எனவும் கூறினார்.
படத்தை பற்றி பேசும்போது, சோசியல், பொலிட்டிகல் த்ரில்லர் எனவும், இப்படத்தில் கூர்மையான வசனங்கள் உள்ளது எனவும் கூறினார். இத்திரைப்படத்தில் மற்ற படங்களைப் போல அல்லாமல் வித்தியாசமாக இசையைமைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதிகாரத்தில் இருக்க வேண்டுமென்றால் கதை சொல்ல வேண்டும். அது உண்மையாக இருக்க வேண்டுமென்று தேவையில்லை. மக்கள் நம்பினால் போதும் என்ற வசனத்துடன் தொடங்கும்போது ஆழமான அரசியல் பேச வருகிறது எனத் தெரிகிறது. சரத்குமார், மந்திரா பேடி, சுரபி என எல்லோருமே தங்களின் பங்களிப்பை உணர்ந்து செயல்பட்டுள்ளது தெரிகிறது. இறுதியில் உலகத்துக்கே அரசியல் சொல்லிக் கொடுத்தவன் தமிழன். அவங்கிட்ட நம்ம கட்சியை அவ்வளவு எளிதாக கொண்டு சேர்க்க முடியாது என முடிகிறது.