Don't Miss!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இதுக்கெல்லாமா வரி விதிப்பாங்க? அந்த நோட்டீஸுக்கு தடை விதிக்கணும்..இசை அமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் வழக்கு
சென்னை: பாடல்களுக்கான நிரந்தர காப்புரிமை வழங்கியதற்காக, வரி செலுத்தும்படி ஜிஎஸ்டி இணை இயக்குனர் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்கக் கோரி ஜி.வி.பிரகாஷ்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்
பிரபல இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர் வெயில், மதராசபட்டினம், ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன் உட்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
இவர் இப்போது ஹீரோவாகவும் நடித்துவருகிறார். டார்லி, த்ரிஷா இல்லனா நயன்தாரா, நாச்சியார் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
ஆயிரம் ஜென்மங்கள்
இப்போது வசந்தபாலன் இயக்கியுள்ள ஜெயில், எழிலின் ஆயிரம் ஜென்மங்கள், ஐங்கரன், அடங்காதே ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன. இவர், தனது படைப்புகளின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியுள்ளார்.
இணை இயக்குனர் நோட்டீஸ்
அப்படி வழங்கினால் சம்மந்தப்பட்ட இசையமைப்பாளர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் படைப்புகளின் காப்புரிமையை நிரந்தரமாக, படத் தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, ஒரு கோடியே 84 லட்சம் ரூபாயை சேவை வரியாக செலுத்த வேண்டும் என, ஜி.எஸ்.டி., இணை இயக்குனர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
வழக்குத் தொடர்ந்தார்
இதை எதிர்த்து அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் 'காப்புரிமையை, தயாரிப்பாளா்களுக்கு வழங்கிய பின், அந்த காப்புரிமைக்கான உரிமையாளா்கள் தயாரிப்பாளா்கள்தான். அதனால் இசையமைப்பாளர் ஆன என்னிடம் ஜிஎஸ்டி வரிகட்டக் கோருவது முரணாக இருக்கிறது. எனவே இதுதொடா்பாக ஜிஎஸ்டி இணை இயக்குநா் எனக்கு அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்க வேண்டும்.
ரத்து செய்ய வேண்டும்
அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு ஜிஎஸ்டி துறைக்கு உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை ஒத்தி வைத்தார். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இதே போல மனுதாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.