Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'எங்கையில் உங்கையச் சேத்து கைரேகை மாத்துது காத்து..' - மனசு மயங்கும் இளையராஜா பாட்டு!
'ஒன்னவிட்டா யாரும் இல்ல
எங்கையில் உங்கையச் சேத்து
கைரேகை மாத்துது காத்து...'
- பாலாவின் நாச்சியார் படத்துக்காக இளையராஜா இசையில் உருவாகியுள்ள மனதை மயக்கும் டூயட் பாடல் இது. பாடலை எழுதியவர் தமிழச்சி தங்கபாண்டியன்.
பாடியவர் ஜீவி பிரகாஷ் - ப்ரியங்கா. நாச்சியார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ஜீவி.
இந்தப் பாடல் பாடிய அனுபவத்தை மெய் சிலிர்க்க பகிர்ந்து கொண்டார் ஜிவி பிரகாஷ். "இந்த நாள் என் வாழ்வின் பொன்னாள். இசைஞானி இசையில் ஒரு பாடல் பாடிவிட வேண்டும் என்பது என் வாழ்நாள் ஆசை. இன்று அது நிறைவேறியது. மிக இனிமையா அந்தப் பாடலைப் பாட என்னை ராஜா சார் தேர்வு செய்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. எப்போதும் என்மீது மிகுந்த அன்பு காட்டுபவர் இசைஞானி. இப்பாடல் அனைவரது மனதையும் வருடும் என்றும், அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடிக்கும்," என்றார்.
ஜிவி பிரகாஷ் சிறுவயதிலேயே சிக்கு புக்கு ரயிலு.. பாடல் பாடியவர். தொடர்ந்து இசையமைத்து பாடி வருகிறார். சமீபத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் மெர்சல் படத்தில் புகழ்பெற்ற 'மெர்சல் அரசன்...' பாடல் இவர் பாடியதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.