Don't Miss!
- Sports 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
- News 8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமா காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தன் சொந்தப் படத்தில் வேறு இசையமைப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்த ஜீவி பிரகாஷ்!
சென்னை: தான் சொந்தமாகத் தயாரிக்கும் புதிய படத்துக்கு வேறு இசை அமைப்பாளரை நியமித்து ஆச்சர்யப்பட வைத்துள்ளார் முன்னணி இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார்.
வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, 30 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளவர் ஜீவி பிரகாஷ் குமார். ஏ ஆர் ரஹ்மானின் சகோதரி மகன் இவர்.
பாடகி சைந்தவியை திருமணம் செய்த கையோடு, முதன்முறையாக புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறார். 'மதயானைக் கூட்டம்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் கதிர் நாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்கிறார். இவர்களுடன் வே.வ.ராமமூர்த்தி, விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
பாலு மகேந்திராவிடம் இணை இயக்குனராகவும், வெற்றிமாறனுடன் 'ஆடுகளம்' படத்தில் வசனகர்த்தா மற்றும் இணை இயக்குனராக பணியாற்றிய விக்ரம் சுகுமார் இப்படத்தை இயக்குகிறார்.
தேனி மாவட்டத்தில் உள்ள இரு முக்கிய குடும்பங்களில் நடைபெறும் சம்பவங்கள், நடைமுறைகள், பழக்க வழக்கங்களை மையமாகக் கொண்டு, அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் தேனி மற்றும் கேரளாவைச் சுற்றியே நடந்து முடிவடைந்துள்ளது.
இப்படத்தின் அறிமுக போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இசையை செப்டம்பர் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர். அக்டோபரில் படத்தை வெளியிடவிருக்கின்றனர்.
தான் முன்னணி இசையமைப்பாளராக இருந்தாலும், தனது சொந்தத் தயாரிப்பான இந்தப் படத்துக்கு ரகுநந்தனை இசையைக்க வைத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் ஜீவி பிரகாஷ். நீர்ப்பறவை, சுந்தரபாண்டியன் போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் ரகுநந்தன்.
நாட்டுப்புற இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது. சின்னச் சின்னதா நல்ல, புதிய விஷயங்களைச் செய்ய வேண்டும் என்பதால்தான் தன் சொந்தப் படத்துக்கு வேறு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்தாராம் ஜீவி.