Don't Miss!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Automobiles ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- News திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: பாஜக சுரேஷ் கோபியை ஜெயிக்க வைக்குதா சிபிஎம்? காங்கிரஸ் ஆவேசம்!
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ரஜினி அமைதியாக இருக்கும்போது துணிந்து குரல் கொடுக்கும் ஜி.வி. பிரகாஷ் #bansterlite
சென்னை: ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டம் பெரிய அளவில் நடந்து வருகிறது. நேற்று மாபெரும் கண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அரசியல் தலைவர்களின் ஆதரவு தேவையில்லை இது எங்களின் போராட்டம் என்று இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஜினி
ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு உலக நாயகன் கமல் ஹாஸன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் இதுவரை இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
|
ஆதரவு
நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் தொடர்ந்து மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்துள்ளார்.
|
ட்வீட்
நடந்து முடிந்த பின்னால் எதையும் தடுக்க முடியாது என்பதை உணர மறுத்தால் "விபரீத" விளைவுகளுக்கு யார் பொறுப்பு..?
மக்களே அரசு மக்களுக்காகவே அரசு #bansterlite என ட்வீட்டியுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.
|
சிறுமியர்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சிறுவர், சிறுமியர் கூட ஆர்வத்துடன் கலந்து கொண்டு கோஷமிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
|
மெரினா
மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார் ஜி.வி. பிரகாஷ். இந்நிலையில் அவர் தூதுக்குடிக்கே சென்று இளைஞர்களுடன் சேர்ந்து போராடினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.