Don't Miss!
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- News 4 மணி வரை உக்கிரமா இருப்பேன்! சுட்டெரிக்கும் வெயில்..வயதானவர்களுக்கு வார்னிங்! எப்போது வாக்களிப்பது?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஒரு தாயின் இறுதி குரலாக இருக்கட்டும்.. ஜிவி பிரகாஷ் பதிவிட்ட ஆறுதல் பதிவு
அற்புதம்மாள் ட்வீட்டுக்கு ஜிவி பிரகாஷ் ஆறுதல் பதிவிட்டுள்ளார்.
சென்னை: அற்புதம்மாளின் கண்ணீரை துடைக்கும்விதமாக, "ஒரு தாயின் நீதிக்கான இறுதி குரல் இதுவாக இருக்கட்டும் என்று ஜிவி பிரகாஷ் ட்வீட் போட்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.. தொடர்ந்து சமூக பிரச்சனைகளை உன்னிப்பாக கவனித்து வருபவர். அதற்காக போராடியும் வருபவர்.
மக்களை பாதிக்கும் அடித்தள பிரச்சனைகளையும் கையில் எடுப்பவர். ஜல்லிக்கட்டு போராட்டம், அனிதா மரணம், விவசாயிகள் பிரச்சனை, நடைமுறை அவலங்கள், அரசியல் விவகாரம் என அனைத்து விதமான சீர்கேடுகளுக்கும் குரல் கொடுத்து வருபவர்.
ஒரு தாயின் நீதிக்கான இறுதி குரல் இதுவாகவே இருக்கட்டும்.
— G.V.Prakash Kumar (@gvprakash) June 11, 2019
இத்தாயின் வேதனை தணிப்போம். நீதியை விதைப்போம்.#29YearsTooMuchGovernor pic.twitter.com/YVmSjgPxs6
இவரது சில ட்விட்டர் அதிகம் பேசப்படுபவைகளாக இருக்கும். அதேபோலதான் பேரறிவாளன் விவகாரத்திலும் நியாயம் கேட்டுள்ளார். அற்புதம்மாள் இன்றைக்கு குமுறி அழுது ஒரு ட்வீட் போட்டுள்ளார். 28 வருஷம் ஆகியும் என் புள்ளை வரலை.. எங்களுக்கு இன்னும் விடியல என்று கண்ணீர் பதிவு போட்டார்.
இந்த பதிவு தமிழக மக்களையே கலங்க செய்தது. இதற்குதான் ஜிவி பிரகாஷ் ஆதரவு தெரிவித்து தனது நிலைப்பாட்டை ட்வீட்டாக போட்டுள்ளார். அதில், "ஒரு தாயின் நீதிக்கான இறுதி குரல் இதுவாகவே இருக்கட்டும். இத்தாயின் வேதனை தணிப்போம். நீதியை விதைப்போம்" என்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.