Don't Miss!
- News கோயிலில் பிரார்த்தனை செய்து பிரசாரத்தை தொடங்கிய செஞ்சி மஸ்தான்.. டீ போட்டு வாக்கு சேகரித்தார்
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
நியாயமான தண்டனை.. தவறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை மணி.. என்கவுன்டரை வரவேற்கும் ஜீவி பிரகாஷ்!
சென்னை: ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டது தவறு செய்யும் நபர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி என நடிகரும் இசையமைப்பாளருமான ஜீவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த 27 ஆம் தேதி ஹைதராபாத்தை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதற்கு காரணமான 4 குற்றவாளிகளும் இன்று காலை என்கவுன்டரில் கொல்லப்பட்டனர்.
4 பேரும் என்கவுன்டர் செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் வரவேற்பு எழுந்துள்ளது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இப்படி ஒரு குற்றத்தை பண்ணிட்டு எத்தனை நாள் ஓட முடியும்.. என்கவுன்டரால் ஹேப்பியான சினிமா பிரபலங்கள்!
ஜீவி பிரகாஷ் கருத்து
என்கவுன்டர் நடத்திய தெலுங்கானா போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜீவி பிரகாஷ், தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
|
எச்சரிக்கை மணி
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ஹைதரபாத் என்கவுன்ட்டர் சம்பவம் வரவேற்கத்தக்கது. பாலியல் பலாத்காரக் குற்றவாளிகளுக்கான நியாயமான தண்டனையாகவே நான் பார்க்கிறேன். தவறு செய்யும் நபர்களுக்கான எச்சரிக்கை மணி என்றே இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. பெண்கள் பாதுகாப்புக்குத் துணை நிற்போம்.. என தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலும் நடக்கனும்
அவரது இந்த டிவிட்டுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் பலர் தமிழ்நாட்டிலும் இதுபோன்ற என்கவுன்டர்கள் நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளனர்.
டிவிட்டர் வாயிலாக
இசையமைப்பாளரான ஜீவி பிரகாஷ் குமார், அவ்வப்போது நாட்டு நடப்புகள் குறித்தும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் குரல் கொடுத்து வருகிறார். நாட்டில் நிகழும் முக்கிய சம்பவங்கள் குறித்தும் டிவிட்டர் வாயிலாக கருத்து தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.