எங்கள் மகளை எங்களிடம் ஒப்படையுங்கள்: நடிகை ஸ்வேதாவின் பெற்றோர் மனு
ஹைதராபாத்: தங்கள் மகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை ஸ்வேதா பாசுவின் பெற்றோர் ஹைதராபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்வேதா பாசு ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டபோது போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவர் பெண்கள் மறுவாழ்வு மையத்தில் தங்க வைப்பட்டுள்ளார்.

அவருடன் சிக்கிய மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர்களின் விபரம் வெளியே வரவில்லை. இந்நிலையில் ஸ்வேதாவின் பெற்றோர் ஹைதராபாத் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
இந்த சூழல்நிலையில் ஸ்வேதாவுக்கு எங்களின் அன்பும், ஆதரவும் தான் தேவை. அதனால் அவரை எங்களிடம் ஒப்படையுங்கள். நாங்கள் அவரை பத்திரமாக பார்த்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
அன்றாடத் தேவைக்கும், குடும்பத்தை காப்பாற்றவும் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டதால் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ஸ்வேதா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











