Don't Miss!
- News தோளை தொட்ட சு.வெங்கடேசன்.. டக்னு திரும்பிய டாக்டர் சரவணன்.. பூரித்த மதுரை.. சபாஷ், இது போதுமே நமக்கு
- Automobiles ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
நாங்க தயங்கினோம்... ஆனா சிம்புவை நடிக்க அழைச்சதே நடிகை ஹன்சிகாதான்... போட்டுடைத்த இயக்குனர்
சென்னை: சிம்புவை அந்த படத்தில் நடிக்க அழைத்ததே நடிகை ஹன்சிகாதான் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.
நடிகை ஹன்சிகா இப்போது நடித்து வரும் படம், 'மஹா'. இது அவரது 50 வது படம்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்குகிறார்.
காவி உடை ஹன்சிகா
இவர், ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் இயக்குனர் லஷ்மணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் காவி உடை அணிந்து ஹன்சிகா புகைப் பிடிப்பது போல் இருந்ததால் எதிர்ப்புக் கிளம்பியது. இந்தப் படத்தில் நடிகை சாயாசிங், தம்பி ராமையா, நாசர், கருணாகரன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
சிம்பு - ஹன்சிகா
ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. காதல் முறிவுக்குப் பிறகு சிம்பு - ஹன்சிகா இணைந்து நடிக்கும் படம் இது என்பதால் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தில் சிம்புவின் லுக் வெளியிடப்பட்டது. இதில் அவர் விமானியாக நடிக்கிறார். கதையில் மாற்றம் செய்து சிம்பு கேரக்டரை அதிகமாக்கி உள்ளனர்.
கோவா விமானி
இயக்குனர் ஜமீல் கூறும்போது, சிம்புவின் கேரக்டர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவாவைச் சேர்ந்த ஒரு விமானியின் வாழ்க்கைக் கதையை மையப்படுத்தி அவர் கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது' என்று கூறியிருந்தார். இந்தப் படத்தில் நடிகர் ஶ்ரீகாந்த், விக்ரம் என்ற போலீஸ் கமிஷனர் கேரக்டரில் நடிக்கிறார்.
கொரோனா அச்சுறுத்தல்
மேலும் மஹத், சனம் ஷெட்டி ஆகியோர் இப்போது இந்தப் படத்தில் புதிதாக இணைந்துள்ளனர். இதன் ஷூட்டிங் 17 ஆம் தேதி தொடங்க இருந்தது. வெறும் 7 நாட்கள் ஷூட்டிங் நடந்தால், படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று தயாரிப்பாளர் அன்பழகன் கூறி இருந்தார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 31 வரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இதன் ஷூட்டிங் தடைபட்டுள்ளது.
சிம்புவிடம் கேட்ட ஹன்சிகா
இதற்கிடையே இந்தப் படத்தில் சிம்புவை நடிக்க அழைத்ததே நடிகை ஹன்சிகாதான் என்று கூறியுள்ளார், இயக்குனர் ஜமீல். அவர் கூறும்போது, கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு சிம்புவை அழைக்க முதலில் தயங்கினோம். ஆனால் இது படத்தில் முக்கியமான கேரக்டர். அப்போது நடிகை ஹன்சிகாதான், நான் சிம்புவிடம் பேசுகிறேன் என்றார். அவர் கேட்டதும் சிம்பு மறுக்கவில்லை. உடனடியாக நடிக்க சம்மதித்தார் என்றார்.
-
ஏன் என்னிடம் சொல்லல.. ஃபேவரைட் இயக்குநரிடம் சண்டைக்கு சென்ற அஜித்.. இப்படியும் நடந்திருக்கா?
-
விசித்ரா பாதிதான் சொல்லி இருக்காங்க..கவுண்டமணி அப்படிப்பட்ட ஆளுதான்.. வலைப்பேச்சு அந்தனன் பேட்டி!
-
Maniratnam's Goat Life Review: எப்படி இது சாத்தியமாச்சு.. ஆடுஜீவிதம் படத்திற்கு மணிரத்னம் விமர்சனம்!