Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டன் ருதுராஜுக்கு வந்த சிக்கல்.. ஆறு மேட்ச்சிலும் ஒரே மாதிரியாக நடந்த நிகழ்வு
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
உல்டாவா செய்யும் ஹன்சிகா: அவர் என்ன ஆசைப்பட்டா அப்படி செய்றார்?
சென்னை: அதர்வாவை அடுத்து மற்றொரு இளம் ஹீரோவுடன் நடிக்கிறார் ஹன்சிகா.
தனுஷின் மாப்பிள்ளை படம் மூலம் கோலிவுட் வந்தார் ஹன்சிகா. தளபதி விஜய், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், சூர்யா,விஷால், சித்தார்த் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.
தற்போது அவர் மார்க்கெட் நிலவரம் சரியில்லை. பெரிய ஹீரோக்கள் படங்களில் நடித்த அவர் தற்போது வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
பிரபுதேவா
வாய்ப்புகள் இல்லாத நிலையில் பிரபுதேவாவுடன் சேர்ந்து குலேபகாவலி படத்தில் நடித்துள்ளார் ஹன்சிகா. அந்த படம் வரும் 12ம் தேதி ரிலீஸாக உள்ளது.
ஹன்சிகா
அதர்வா முதன் முதலாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஹன்சிகா. இந்நிலையில் அவருக்கு மேலும் ஒரு பட வாய்ப்பு கிடைத்துள்ளது.
துப்பாக்கி முனை
மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த தினேஷ் செல்வராஜ் இயக்கும் துப்பாக்கி முனை படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடிக்கிறார் ஹன்சிகா. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.
கதை
இயக்குனர் மும்பைக்கே வந்து என்னை சந்தித்து கதை சொன்னார். கதை மிகவும் பிடித்திருந்ததால் உடனே ஓகே சொல்லிவிட்டேன். இதுவரை நான் நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரம் எனக்கு கிடைத்துள்ளது என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.