Don't Miss!
- Finance தங்கம் விலை வரலாற்று உச்சம்.. மீண்டும் மீண்டுமா.. எப்பதான் தங்கம் வாங்க முடியும்..?!
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இன்னும் 7 நாள் ஷூட்தான் பாக்கியாம்... மீண்டும் தொடங்குகிறது சிம்பு- ஹன்சிகாவின் 'மஹா' படப்பிடிப்பு!
சென்னை: ஹன்சிகாவின் 50 வது படமான 'மஹா' ஷூட்டிங் சென்னையில் மீண்டும் தொடங்குகிறது.
Recommended Video
நடிகை ஹன்சிகா இப்போது நடித்துவரும் படம் 'மஹா'. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்குகிறார்.
இவர், ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் இயக்குனர் லஷ்மணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
காவி உடை ஹன்சிகா
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் காவி உடை அணிந்து ஹன்சிகா புகைப் பிடிப்பது போல் இருந்ததால் எதிர்ப்புக் கிளம்பியது. இந்தக் படத்தில் நடிகை சாயாசிங், தம்பி ராமையா, நாசர், கருணாகரன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
சிம்பு கேரக்டர்
இந்தப் படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. காதல் முறிவுக்குப் பிறகு சிம்பு - ஹன்சிகா இணைந்து நடிக்கும் படம் இது என்பதால் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் இந்தப் படத்தில் சிம்புவின் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் அவர் விமானியாக நடிக்கிறார். கதையில் மாற்றம் செய்து சிம்பு கேரக்டரை அதிகமாக்கி உள்ளனர்.
கோவா விமானி
இயக்குனர் ஜமால் கூறும்போது, சிம்புவின் கேரக்டர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவாவைச் சேர்ந்த ஒரு விமானியின் வாழ்க்கைக் கதையை மையப்படுத்தி அவர் கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது' என்று கூறியிருந்தார். இந்தப் படத்தில் நடிகர் ஶ்ரீகாந்த், விக்ரம் என்ற போலீஸ் கமிஷனர் கேரக்டரில் நடிக்கிறார்.
மீண்டும் படப்பிடிப்பு
ஶ்ரீகாந்த் வரும் காட்சிகள் திரில்லாக இருக்கும் படக்குழு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இடையில் நிறுத்தப்பட்டு இருந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருக்கிறது. ' 7 நாள் ஷூட்டிங் மட்டுமே பாக்கி இருக்கிறது. வரும் 17 ஆம் தேதி சென்னையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதோடு படம் முடிகிறது' என்று அதன் தயாரிப்பாளர் மதியழகன் தெரிவித்தார்.
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!
-
அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!