Don't Miss!
- News உயிரைக் கொல்லும் ஸ்மோக் பிஸ்கட்! இவ்வளவு பாதிப்பு தருமா? தடை எப்போது?
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
குழந்தைகளை குஷிப்படுத்த வரும் 'அனுமனும் மயில்ராவணனும்'!
ராமாயண கதாபாத்திரங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அனிமேஷன் திரைப்படம் 'அனுமனும் மயில்ராவணனும்'.
Recommended Video
சென்னை: ராமாயண கதாபாத்திரங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'அனுமனும் மயில்ராவணனும்' அனிமேஷன் திரைப்படம் ஜூலை மாதம் 6ம் தேதி வெளியாகிறது.
நாடு முழுதும் உள்ள குழந்தைகளின் மனதை கவர்ந்த கார்ட்டூன் நிகழ்ச்சியான சோட்டா பீம்-ஐ உருவாக்கிய கிரீன் கோல்டு அனிமேஷன் நிறுவனம், அனுமனும் மயில்ராவணனும்' எனும் அனிமேஷன் திரைப்படத்தை தயாரித்துள்ளது.
பல் மருத்துவம் படித்து, பின்னர் இங்கிலாந்து சென்று அனிமேஷன் பயின்று, வார்னர் பிரதர்ஸ் உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் திரைப்பட நிறுவனங்களில் பணியாற்றிய எழில் வேந்தன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ராமாயணத்தின் கடைசிப் பகுதியில் வரும் சம்பவங்களை தொகுத்து, கற்பனை கலந்து இந்த படத்தை உருவாக்கி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இப்படம் குறித்து அவர் கூறியதாவது, "ஹனுமன் தான் இப்படத்தின் ஹீரோ. இறுதிப் போரில் நிராயுதபாணியாக நிற்கும் ராவணனிடம் இன்று போய் நாளை வா என ராமர் அவகாசம் கொடுக்கிறார். போர் களத்தில் இருந்து அரண்மனை செல்லும் ராவணன், தனது சகோதரனான பாதாள உலகின் ராஜாவான தந்திரக்காரன் மயில்ராவனைக் கொண்டு ராமரையும், லட்சுமணனையும் சிறைப்பிடிக்கிறார். அவனை அழித்து, ராமரையும், லட்சுமணனையும் அனுமன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதை சாகசம் நிறைந்த, சுவாரஸ்யமான கதையமைப்பில் சொல்லியுள்ளோம்.
முதல் முறையாக பத்து தலை ராவணன், புதுமையான ஒரு வடிவத்தில் சித்தரிக்கபட்டுள்ளார். அவரது பத்து தலைகளும் தனித்தனியே செயல்படும். பாம்பு மனிதர்கள், ஆளை விழுங்கும் ராட்சத புழுக்கள் என படத்தில் வரும் பல வித்தியாசமான கேரக்டர்கள் குழந்தைகளை வெகுவாக கவரும்.
இந்த படத்தை முழுக்க முழுக்க சென்னையிலேயே உருவாக்கியுள்ளோம். முதல் முறையாக இந்தியாவில் தயாரான சர்வதேச தரம் கொண்ட இதிகாசக் கதையம்சம் உள்ள 3டி அனிமேஷன் படமாக 'அனுமனும் மயில்ராவணனும்' இருக்கும்.
இந்தியா முழுவதும் சுமார் 350 திரையங்குகளில் இப்படம் திரையிடப்படுகிறது. ஜூலை 6ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது" இவ்வாறு அவர் கூறினார்.