சின்ன சின்ன விஷயத்தகூட என்ஜாய் பண்ணுங்க... மகிழ்ச்சிக்கான ரகசியம் சொல்லும் மஞ்சிமா
சென்னை : நடிகை மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆனவர்.
Recommended Video
தொடர்ந்து படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக மாறியுள்ளார்.
இந்நிலையில் மகிழ்ச்சிக்கான ரகசியத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகை மஞ்சிமா மோகன்
சிம்புவுடன் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின்மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆனவர் நடிகை மஞ்சிமா மோகன். முதல் படத்திலேயே தன்னுடைய தேர்ந்த நடிப்பின்மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையாக மாறியுள்ளார். தெடர்ந்து நடித்தும் வருகிறார்.

பல்வேறு பதிவுகள் பகிர்வு
தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக சூட்டிங் இல்லாமல் வீட்டில் உள்ள மஞ்சிமா சமூக வலைதளங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பிசியாக செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது கொரோனா உள்ளிட்டவை குறித்த பதிவுகளையும் அவர் பகிர்ந்து வருகிறார்.

சின்ன விஷயங்களில் என்ஜாய்
இந்நிலையில் தற்போது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான சீக்ரெட் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். சின்ன சின்ன விஷயங்களையும் என்ஜாய் செய்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நம்முடைய வசமாகும் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த படம்
மேலும் மேக்கப் அதிகம் இல்லாத தன்னுடைய இயல்பான புகைப்படத்தையும் இந்த பதிவில் அவர் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. சமீபத்தில் இவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். தன்னுடைய ரசிகர்களையும் போட்டுக் கொள்ள அறிவுறுத்தி ட்வீட் செய்திருந்தார்.


Click it and Unblock the Notifications











