Don't Miss!
- News பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
மீண்டும் சூர்யாவுடன் கைகோர்க்கும் ஹரி.. சிங்கம் 3-ம் பாகமா?
விஷாலின் பூஜை படத்துக்குப் பிறகு, மீண்டும் சூர்யாவுடன் கை கோர்க்கிறார் இயக்குநர் ஹரி.
பூஜை படம் தீபாவளிக்கு வெளியாவதையொட்டி, இயக்குநர் ஹரி இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ‘பூஜை' படத்திற்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறேன். அவரிடம் 2 கதைகள் சொல்லியிருக்கிறேன். அதில் அவர் எதை தேர்வு செய்வார் என்று தெரியவில்லை. இப்படம் ‘சிங்கம்' படத்தின் மூன்றாம் பாகமாக இருக்குமா? என்பதை இப்போதே சொல்ல முடியாது," என்றார்.
ஏற்கெனவே சூர்யா-ஹரி கூட்டணியில் ‘சிங்கம்', ‘சிங்கம்-2' ஆகிய படங்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டாகின. மேலும் ‘சிங்கம்' படத்தின் 3-ம் பாகம் எடுக்கவும் தான் தயார் என்று ஹரி கூறியிருந்தார்.
ஆனால் அவர், விஷாலை வைத்து ‘பூஜை' படத்தை இயக்க ஆரம்பித்தார்.
பூஜைக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைய முடிவு செய்திருக்கும் ஹரி, இந்த படத்தை ‘சிங்கம்' படத்தின் 3-ம் பாகமாக எடுக்கவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் கூறவுமில்லை.