Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஹரிகுமாரின் "டபுள் ஆக்ட்".. மதுரை மணிக்குறவன்.. ஜோடியாக மாதவி லதா
சென்னை: மதுரை மணிக்குறவன்.. இது ஹரிகுமார் அடுத்து நடிக்கும் புதுப் படம்.
தூத்துக்குடி, மதுரை சம்பவம், திருத்தம், போடி நாயக்கனூர் கணேஷன் போன்ற படங்களில் நடித்துள்ள ஹரிகுமார் தற்போது காதல் அகதி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அவர் அடுத்து போலீஸ் அதிகாரியாகவும், மணிக்குறவனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கும் படமாகும் இது. இதற்கு மதுரை மணிக்குறவன் என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை காளையப்பா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறது.
மாதவிலதா
தெலுங்கில் நடித்துக் கொண்டுள்ள மாதவிலதா இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி வருகிறார்.
10 படம் நடித்தி முத்து நாயகி
மாதவி லதா தெலுங்கில் பத்துப் படங்களில் நடித்துள்ளாராம். ரொம்ப பிசியான நடிகையாம். இனி தமிழிலும் பிசியாவார் என்று நம்பலாம்.
கோட்டா
கோட்டா சீனிவாசராவ், பருத்திவீரன் சரவணன், கே.ஜி.காளையப்பன் மூவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள். மற்றும் பவித்ரா, எம்.எஸ்.பாஸ்கர், மாத்யூ, டெல்லிகணேஷ், ராஜ்கபூர், முத்துகாளை, நெல்லை சிவா, சுஜாதா, அனுமோகன், போண்டாமணி, ஜே.லலிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.
பாட்டுக்கு 2 பேர்
பாடல்களை நா.முத்துக்குமார், விவேகா ஆகியோர் எழுதியுள்ளனர். சண்டைக் காட்சிகளை ஜாகுவார் தஹ்கம் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கே.ராஜரிஷி.
மதுரை மண்ணின் கதையாம்
இது மதுரை மண்ணில் வாழ்ந்து மறைந்த மாமனிதன் மதுரை மணிக்குறவனின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்துடன் கற்பனையை கலந்து திரைக்கதை அமைத்துள்ளோம்.
பயங்கர பரபரப்பாக இருக்குமாம்
இது பரபரப்பான திரைக்கதையாக இருக்கும். மதுரை, சென்னை, காரைக்குடி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றார் இயக்குனர்.