Don't Miss!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மலையூர் மம்பட்டியான் மாதிரி மதுரை மணிக்குறவன்...!
சென்னை: இளையராஜா இசையில் ஹரிகுமார் நடிக்கும் படம் "மதுரை மணிக்குறவன்" மலையூர் மம்பட்டியான் படம் போல இருக்கும் என்று அதன் இயக்குநர் ராஜரிஷி கூறயுள்ளார்.
காளையப்பா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கே.ஜி.காளையப்பன் தயாரிக்கும் படம் "மதுரை மணிக்குறவன்".
இரட்டை வேடங்களில் நடிக்கும் ஹரிகுமார் இந்த படத்திற்காக சில பிரத்யேக பயிற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார். தோற்றத்திலும் உடல்வாகு, மற்றும் நடை, உடை பாவனையிலும் வித்தியாசத்தை காட்டி நடித்து வருகிறார்.
மாதவிலதா...
இப்படத்தில் பிரதான நாயகியாக நடிப்பவர் மாதவிலதா. அழகான கிராமத்து முக வெட்டுடன், அச்சு அசல் கிராமத்துப் பெண்ணாகவே காட்சி தருகிறார் மாதவி லதா.
மேலும் 2 நாயகிகள்...
இவர் தவிர மேலும் 2 நாயகிகளும் படத்தில் உள்ளனர். அவர்கள் ரிஷிதா மற்றும் பவித்ரா. இவர்கள் தவிர சரவணன், சுமன், கே.ஜி.காளையப்பன், சுஜாதா, அனுமோகன், எம்.எஸ்.பாஸ்கர், டெல்லிகணேஷ், போண்டாமணி, முத்துக்காளை, ஐவரி.கே.சண்முகம் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இசை இளையராஜா...
படத்திற்கு இசையமைப்பவர் இசைஞானி இளையராஜா. கலை -முருகன் / எடிட்டிங் - வி.டி.விஜயன். ஸ்டன்ட் - ஜாக்குவார் தங்கம் / வசனம் - வெற்றி
இயக்குநர் ராஜரிஷி...
படத்தின் கதையை எழுதி இயக்குபவர் ராஜரிஷி. படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படம் பற்றி இயக்குனர் ராஜரிஷியிடம் கேட்டோம்...
வட்டார மக்களின் நம்பிக்கை...
அந்தந்த பகுதிகளில் மக்களின் பிரச்சனைகளுக்கு போராடி வட்டார மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி, போன்று மதுரை மணிக்குரவனும் ஒருவன்.
மண் சார்ந்த மனிதன்...
மண் சார்ந்த மனிதனின் வாழ்க்கைக்கு இளையராஜாவின் இசை சிறப்பாக இருக்கும் என்று அவரை அணுகினோம். அவரும் கதையை கேட்டு கதைக்கு உயிரூட்டுகிறேன் என்று அருமையாக டியூன் போட்டுக் கொடுத்திருக்கிறார்.
இதுவே முதல் வெற்றி...
அது எங்கள் யூனிட்டுக்கு கிடைத்த முதல் வெற்றி என்றார் இயக்குனர் ராஜரிஷி. இசைஞானியுடன் கை கோர்த்த மதுரை மணிக்குறவனுக்கு வெற்றி கிடைக்கட்டும்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
அந்த மாதிரி படங்களை எல்லாம் பார்க்கமாட்டேன்.. ஆனால் நடிப்பேன்.. ஆண்ட்ரியா ஓபன் டாக்
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை