Don't Miss!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Finance உங்ககிட்ட கிழிஞ்ச ரூபாய் நோட்டு இருக்கா.. அப்போ கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்குத்தான்!
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஓமணப் பெண்ணே படக்குழு மீண்டும் இணையும் புதிய திரைப்படம்!
சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் முதல் முறையாக இணைந்து நடித்த திரைப்படம் ஓமணப் பெண்ணே.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ரிது வர்மா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தமிழில் ஓமணப் பெண்ணே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
அந்த படத்துல வாங்குன அடி... ஒல்லி நடிகர் தயாரிப்பு பக்கமே திரும்பாம இருக்குறதுக்கு காரணம் அதானாம்!
அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓமணப் பெண்ணே
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஓமணப் பெண்ணே திரைப்படமும் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது நடிகர் ஹரீஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் முதல் முறையாக இணைந்து இந்தப் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.
அதிகாரப்பூர்வ ரீமேக்
அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது.
கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பெல்லி சூபுளு படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் ஓமணப் பெண்ணே . தெலுங்கில் விஜய் தேவரகொண்டா மற்றும் ரிது வர்மா இணைந்து நடித்து இருந்தனர். இந்த திரைப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று விஜய் தேவரகொண்டாவின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது
மீண்டும் இந்த கூட்டணி இணைகிறது
இந்த நிலையில் தமிழில் வெளியான ஓமணப் பெண்ணே திரைப்படமும் அமோக வரவேற்பை பெற்றது. திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது பின் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டது. இளம் காதலர்களை பற்றியும் நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் பிடித்த தொழிலை செய்து முன்னேறி விடலாம் என்பதை மிகவும் ஆணித்தரமாக கூறியுள்ள இந்த திரைப்படம் வெற்றி பெற்றதால் மீண்டும் இந்த கூட்டணி இணைய உள்ளது.
Recommended Video
புதிய காதல் கதையில்
புதிதாக காதல் கதை களத்தில் தயாராக உள்ள புதிய திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்க ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் மீண்டும் ஒரு முறை ஜோடியாக நடிக்கின்றனர். ஓமணப் பெண்ணே படத்திலேயே இந்த ஜோடி அனைவரையும் கவர்ந்தது. இப்பொழுது மீண்டும் புதிய படத்தில் இணைவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாக உள்ளது.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!