Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கொரோனா பாதிப்பு.. நீளும் உதவிக் கரம்.. ஹரிஷ் கல்யாண் எவ்வளவு நிதி அளித்துள்ளார் தெரியுமா?
சென்னை: கொரோனாவால் சினிமா படப்பிடிப்புகள் ரத்தாகி உள்ள நிலையில் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
Recommended Video
உலகம் முழுவதும் சுமார் 4 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தோ எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க இன்று மாலை முதல் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக தென்னிந்திய சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், FEFSI ஊழியர்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளனர்.
அவர்களுக்கு உதவும் வகையில், நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாயை நிதியாக அளித்துள்ளார்.
நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் தலா 10 லட்சம் ரூபாயை ஃபெப்ஸி தொழிலாளர்களுக்கு நிதியுதவி செய்துள்ளனர்.
நடிகர் பிரகாஷ் ராஜ், 150 அரிசி மூட்டைகளை சினிமா தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளார்.
இவர்களின் வரிசையில் பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் இளம் நாயகன் ஹரிஷ் கல்யாண், FEFSI தொழிலாளர்களை சந்தித்து ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார்.