Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
விஷால், அனிஷா திருமணம் நின்றுவிட்டதா?
சென்னை: விஷால், அனிஷா அல்லா ரெட்டியின் திருமணம் நின்றுவிட்டதாக பேச்சு கிளம்பியுள்ளது.
தெலுங்கு நடிகையான அனிஷா அல்லா ரெட்டியை பார்த்ததும் காதலில் விழுந்ததாக தெரிவித்தார் விஷால். இதையடுத்து ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் எல்லாம் நடந்தது.
விஷாலும், அனிஷாவும் ஒருவரையொருவர் பாராட்டி சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டார்கள். அதை பார்த்து விஷால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்களின் திருமணம் அக்டோபர் மாதம் நடக்கும் என்று நிச்சயிக்கப்பட்டது. ஆனால் இரண்டு பக்கமும் திருமண வேலையை துவங்கவில்லை.
திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது என்று பேச்சு கிளம்பியுள்ளது. அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த விஷால் புகைப்படங்கள், நிச்சயதார்த்த புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார்.
கிடைத்த பொக்கிஷத்தை தொலைத்துவிட்டீர்களே: நடிகரை விளாசிய நெட்டிசன்ஸ்
விஷால் என்ற ஒருவர் அவர் வாழ்வில் வந்ததற்கான எந்த தடயமும் இல்லாமல் இன்ஸ்டாகிராம் கணக்கை மாற்றியுள்ளார் அனிஷா. அவரின் இந்த செயலால் திருமணம் நின்றுவிட்டது என்ற பேச்சு வலுப்பெற்றுள்ளது.
திருமண விவகாரம் குறித்து இருவீட்டாரும் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. விஷால் அவர் பாட்டுக்கு படங்களில் பிசியாக உள்ளார். விஷால், அனிஷா இடையே காதல் வலுவாக இருந்த நிலையில் என்ன ஆனது என்று தெரியவில்லை.
திருமணம் நின்றுவிட்டதா, அனிஷா ஏன் விஷாலின் புகைப்படங்களை எல்லாம் நீக்கினார் என்பதை அவர்கள் தெரிவித்தால் தான் உண்மை தெரிய வரும்.