Don't Miss!
- Sports ஐபிஎல் 2024 - சிஎஸ்கே பிளே ஆப் வாய்ப்பு பாதிப்பு.. புள்ளி பட்டியலில் கீழே சரிந்தது
- News தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?
- Finance மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தலைவலி..!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'லட்டு': பேசித் தீத்துக்கங்க - பாக்யராஜ், சந்தானத்துக்கு நீதிமன்றம் அட்வைஸ்!
சந்தானம், 'பவர் ஸ்டார்' சீனிவாசன், நடிகை விசாகா ஆகியோர் நடித்து பொங்கலுக்கு வெளியான படம் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா'. இந்த படத்தின் கதை அப்படியே பாக்யராஜின் புகழ்பெற்ற படமான இன்று போய் நாளை வா படத்தின் கதையாகும். தன்னுடைய அனுமதி இல்லாமல் கதை கருவை திருடி படமெடுத்துவிட்டார்கள் என்று பாக்யராஜ் புகார் கூறினார்.
இதற்குக் காரணமான சந்தானம், ராமநாராயணன், புஷ்பா கந்தசாமி ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாக்யராஜ் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தார்.
இந்த புகாரின் மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயர்நீதி மன்றத்தில் நடவடிக்கை கோரி மனு செய்தார் பாக்யராஜ்.
நீதிபதி கிருபாகரன் தலைமையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி, பாக்யராஜ் மற்றும் சந்தானம் ஆகிய இருதரப்பும் சமரச தீர்வு மையத்தை அணுகி பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்று உத்தரவிட்டார். அப்படி சமரசமாகாவிட்டால் மார்ச் 6-ம் தேதி வழக்கை விசாரிப்பதாக அறிவித்தார்.