Don't Miss!
- News பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இனி இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த அகி மியூசிக், எக்கோவுக்கு நீதிமன்றம் தடை!
சென்னை: இளையராஜாவின் பாடல்களை இனி அகி மியூசிக் மற்றும் எக்கோ நிறுவனங்கள் வெளியிடவோ விற்பனை செய்யவோ கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களை எக்கோ நிறுவனம் உரிய காப்புரிமைத் தொகை தராமல் சில நிறுவனங்கள் விற்பனை செய்து வந்ததாக இளையராஜா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இளையராஜா பாடல்களை வெளியிட்டு விற்பனை செய்து வந்த அகி மியூசிக், எக்கோ போன்ற நிறுவனங்கள் இனி இந்தப் பாடல்களை வெளியிட நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் அந்த மனுவில்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்வாணன், "இளையராஜாவின் பாடல்களை விற்கவோ, உற்பத்தி செய்யவோ, வேறு நபர்களுக்கு அனுப்பவோ தடை செய்யப்பட்டுள்ளது.
மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும்," என அகி மியூசிக்கின் அகிலன் லட்சுமணன், எக்கோ நிறுவனத்தின் நரசிம்மன் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.