Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இனி இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த அகி மியூசிக், எக்கோவுக்கு நீதிமன்றம் தடை!
சென்னை: இளையராஜாவின் பாடல்களை இனி அகி மியூசிக் மற்றும் எக்கோ நிறுவனங்கள் வெளியிடவோ விற்பனை செய்யவோ கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களை எக்கோ நிறுவனம் உரிய காப்புரிமைத் தொகை தராமல் சில நிறுவனங்கள் விற்பனை செய்து வந்ததாக இளையராஜா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இளையராஜா பாடல்களை வெளியிட்டு விற்பனை செய்து வந்த அகி மியூசிக், எக்கோ போன்ற நிறுவனங்கள் இனி இந்தப் பாடல்களை வெளியிட நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் அந்த மனுவில்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்வாணன், "இளையராஜாவின் பாடல்களை விற்கவோ, உற்பத்தி செய்யவோ, வேறு நபர்களுக்கு அனுப்பவோ தடை செய்யப்பட்டுள்ளது.
மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும்," என அகி மியூசிக்கின் அகிலன் லட்சுமணன், எக்கோ நிறுவனத்தின் நரசிம்மன் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.