மெர்சல் படத்தை இணைய தளங்களில் வெளியிட நீதிமன்றம் தடை!
சென்னை: விஜய்யின் மெர்சல் படத்தை இணைய தளங்களில் வெளியிடக் கூடாது என்று நீதிமன்றண் உத்தரவிட்டுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'மெர்சல்'. இதில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் இன்னும் நான்கு தினங்களில் வெளியாகவிருக்கிறது. மெர்சல் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மெர்சல் திரைப்படத்தை இணைய தளங்களில் வெளியிட தடைகோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள் 'மெர்சல்' திரைப்படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும் இணையதள சேவை வழங்கும் பல நிறுவனங்களுக்கும் தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











