Don't Miss!
- Lifestyle வறுமை நீங்க... செல்வம் பெருக.. துளசியை இந்த திசையில் வையுங்கள்..!
- Sports IPL 2024: ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான பவுலிங்.. ரிஷப் பண்ட் வைத்த ஆப்பு.. கதிகலங்கிய மோஹித்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மதுரையில் உள்ள சினிமா திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை
மதுரை: மதுரையில் உள்ள சினிமா தியேட்டர்களில் சிறப்பு காட்சிகள் திரையிடுவதற்கு இடைக்கால தடைவிதித்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஹைகோர்ட் கிளை, சிறப்பு காட்சிகளால் ஏற்படும் வரிவருவாய் இழப்பு குறித்து மத்திய கலால் வரிதுறையின் (பொது விற்பனை வரி) முதன்மை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர்,மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த மகேந்திர பாண்டி என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளை திரையிடுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இனி வரும் காலங்களில் மதுரையில் உள்ள சினிமா தியேட்டர்களில் சிறப்பு காட்சிகள் திரையிடுவதற்கு இடைக்கால தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இது குறித்து மத்திய கலால் வரி துறையின் ( பொது விற்பனை வரி ) முதன்மை ஆணையர்,மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.