Don't Miss!
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- News பில் கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துகளை பரிசளித்த மோடி.. கையில் உள்ள மற்றொரு கிப்ட் என்ன பாருங்க
- Technology தூக்குங்கடா செல்லத்தை.. Apple போட்ட டைட்டானியம் ரோஸ்மில்க்.. கண்ணை பறிக்கும் சுவாரசியமான iPhone 16 லீக்ஸ்..
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மலையாள இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
பிரபல மலையாள இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நடிகர் கமல்ஹாசன் நடித்த முரடன் உள்ளிட்ட பல்வேறு மலையாளப் படங்களை இயக்கியவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இவர் தற்போது சென்னை கே.கே.நகரில் வசிக்கிறார்.
இவர் மீது, சென்னையைச் சேர்ந்த பள்ளிக்கூட முதல்வர் அனுராதா ரவி என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசிடம் புகார் மனு ஒன்று அளித்தார்.
அந்த புகார் மனுவில், "சென்னையை அடுத்த போரூர் அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள 40 சென்ட் நிலத்தை தன்னிடம் விற்பனை செய்துவிட்டு, அதே நிலத்தை மற்ற சிலரிடமும் விற்பனை செய்து மோசடி செய்துள்ளார்", என்று கூறியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி டி.மதிவாணன் விசாரித்தார். போலீஸ் விசாரணை தொடர்ந்து நடப்பதால் முன்ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.