புலிவால் படத்துக்கு தடை இல்லை.. தாராளமா வெளியிடலாம்!- உயர்நீதிமன்றம்
சென்னை: புலிவால் படத்தை இன்று அறிவித்தபடி வெளியிட்டுக் கொள்ளலாம்.. தடை ஏதுமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
விமல், பிரசன்னா, அனன்யா, ஓவியா நடித்த படம் புலிவால். ஜி.மாரிமுத்து இயக்கியுள்ளார். ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரித்துள்ளனர். இப்படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது,

இதற்கிடையில் புலிவால் படத்துக்கு தடை விதிக்க கோரி கிரிபுஜா பட நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தனது வழக்கு மனுவில், " விடியல்' என்ற படத்தை தயாரிக்க நடிகர் சரத்குமாரின் ஆர்.ஆர்.மூவிஸ் நிறுவனத்துடன் கடந்த 2010ல் ஒப்பந்தம் போட்டோம். இதற்காக முன்பணமும் வழங்கப்பட்டது.
ஆனால் எங்கள் படத்தை எடுக்காமல் 'சென்னையில் ஒரு நாள்' என்ற படத்தை எடுத்து வெளியிட்டனர். அதன் பிறகும் எங்கள் படத்தை எடுக்காமல் 'புலிவால்' என்ற படத்தை எடுத்துள்ளனர். எனவே இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தனது கிரிபுஜா பிலிம்ஸ்.

இந்த வழக்கு நீதிபதி ராமநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. சரத்குமார் பதில் மனுதாக்கல் செய்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி 'புலிவால்' படத்துக்கு தடை கேட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











