Don't Miss!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
எந்திரன் பட வழக்கு: சன் பிச்சர்ஸுக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம்!
எந்திரன் படத்தின் கதை வழக்கில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ரூ 25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எந்திரன் படம் தன் சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டதாகக் கூறி, காப்புரிமைச் சட்டத்தின்படி தனக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் ஷங்கர், கலாநிதி மாறன் மற்றும் சன் பிச்சர்ஸ் ஆகியோருக்கு எதிராக ஆரூர் தமிழ்நாடன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தது சன் பிக்சர்ஸ். இதைத் தொடர்ந்து சன் பிச்சர்ஸ் தோன்றாத் தரப்பினராக அறிவித்து 29.10.2015 அன்று உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. இதையடுத்து ஆரூர் தமிழ்நாடன் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது பிரமான வாக்குமுலத்தையும், ஆவணங்களையும் சமர்பித்தார்.
இந்த நிலையில், தம்மை தோன்றாத் தரப்பினராக அறிவித்ததை நீக்கி உத்தரவிடும்படி கலாநிதி மாறன் மற்றும் சன் பிச்சர்ஸ் மனு செய்திருந்தனர். இந்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சுமார் 5 வருடங்களுக்கு மேலாக எந்த பதிலையும் தாக்கல் செய்யாததைக் கண்டித்த நீதிமன்றம், சன் பிக்சர்ஸுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது. இந்தத் தொகையை 8.6.2016க்குள் மானாமதுரை தொழு நோயாளிகள் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் நீதிபதி தெரிவித்தார்.