Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
எந்திரன் பட வழக்கு: சன் பிச்சர்ஸுக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம்!
எந்திரன் படத்தின் கதை வழக்கில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ரூ 25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எந்திரன் படம் தன் சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டதாகக் கூறி, காப்புரிமைச் சட்டத்தின்படி தனக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் ஷங்கர், கலாநிதி மாறன் மற்றும் சன் பிச்சர்ஸ் ஆகியோருக்கு எதிராக ஆரூர் தமிழ்நாடன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தது சன் பிக்சர்ஸ். இதைத் தொடர்ந்து சன் பிச்சர்ஸ் தோன்றாத் தரப்பினராக அறிவித்து 29.10.2015 அன்று உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. இதையடுத்து ஆரூர் தமிழ்நாடன் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது பிரமான வாக்குமுலத்தையும், ஆவணங்களையும் சமர்பித்தார்.
இந்த நிலையில், தம்மை தோன்றாத் தரப்பினராக அறிவித்ததை நீக்கி உத்தரவிடும்படி கலாநிதி மாறன் மற்றும் சன் பிச்சர்ஸ் மனு செய்திருந்தனர். இந்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சுமார் 5 வருடங்களுக்கு மேலாக எந்த பதிலையும் தாக்கல் செய்யாததைக் கண்டித்த நீதிமன்றம், சன் பிக்சர்ஸுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது. இந்தத் தொகையை 8.6.2016க்குள் மானாமதுரை தொழு நோயாளிகள் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் நீதிபதி தெரிவித்தார்.